6291. பார்த்தேனே மூலியது
மகிமைதன்னை பாண்மையுடன் பிர்மித்து யேங்கும்போது
தீர்த்தமுடன் மூலியது
வளத்திற்றானும் தீர்க்கமுடன் சிவமாண்பர் கரத்தைப்பற்றி
நேர்த்தியுடன் மூலியது
தன்னைத்தானும் நேரான வனந்தனிலே இருக்கும்நேர்மை
பூர்த்தியுடன் யான்கண்டு
திடுக்கிட்டேங்கி புகழாகக் குளிகைகொண்டு வந்திட்டேனே
விளக்கவுரை :
6292. வந்தேனே கல்லாலின்
மரத்தின்பேரில் வளமையுடன் குளிகைகொண்டு நிற்கும்போது
அந்தமுள்ள சிவமாண்பர்
தன்னைத்தானும் வதிதம்மை சிறப்புடனே தானிழுக்கும்
வண்மைமார்க்கம் தந்திரமாம்
மூலியது வசியமூலி தண்மையுடன் மகிமையது கூறுவேனே
விளக்கவுரை :
[ads-post]
6293. கூறுவேன் புலிப்பாணி
புனிதவானே குவலயத்தில் சித்துமுனி யாரேனுந்தான்
சீறுகின்ற சர்ப்பத்தின்
கற்பமூலி சீருலகில் கண்டவர்கள் எவர்தானுண்டு
தேறுபுகழ் பதினெண்பேர்
நவகோடிதாமும் தேசமதில் வெகுமகிமை பூண்டாரல்லோ
மாறுடைய கூறுஞ்சாரை
சர்ப்பமூலி மானிலத்தில் கண்டவர்கள் இல்லைதாமே
விளக்கவுரை :
6294. இல்லையே சித்தர்களும்
வணக்கங்கூறார் எழிலான சாத்திரத்தைத் தானுங்காணார்
தொல்லையெனும் வனமூலி
விஷத்தைக்காணார் தொட்டதொரு கிட்டிருந்த மூலிகண்டார்
அல்லல்வினை தானறுக்கும்
வசியமூலி யவனிதனில் வெகுசித்தர்கண்டாருண்டு
கொல்லிமலை திரிந்தாலும்
இந்தமூலி குவலயத்தில் கிட்டாது கிட்டாதன்றே
விளக்கவுரை :
6295. கிட்டாது என்றதொரு
மூலிதானும் கீர்த்தியுள்ள சிலமாண்பர் தன்னையல்லோ
எட்டாத பொருள்தேடிப் போனதாலே
எழிலான சிவமாண்பர் தானுமங்கே
சட்டமுடன் பணியைநம்பி
யுழுதவர்போல் சாங்கமுடன் மூலியது வினயமாச்சு
விட்டகுறை யிருந்ததனால்
வாய்க்கும்பாரு விண்ணாடர் மண்ணாடர் காணார்தாமே
விளக்கவுரை :