6286. திகைத்துமே சிவமாண்பர்
இருவர்தாமும் தீர்க்கமுடன் மனஞ்சோர்ந்து நிற்கும்போது
புகைபடர்ந்த வனந்தனிலே
சர்ப்பந்தானும் புகட்சியுடன் முன்னிறந்த சர்ப்பங்கூட்டி
பகைபோன்ற சிவமாண்பர்
இருவர்காண பாங்குடனே கானகத்தைச் சென்றவண்ணம்
தகமையுடன் சர்ப்பமது
கொண்டுசெல்ல தாட்சியுடன் சிலமாண்பர் பார்த்திட்டாரே
விளக்கவுரை :
6287. பார்த்துமே சர்ப்பமது
சென்றுதென்று பாங்குடனே சிவமாண்பர் இருவர்தாமும்
நேர்த்தியுள்ள மூலிகைதான்
என்றறிந்து நேர்மையுடன் சிவமாண்பர் மனதிலெண்ணி
பூர்த்தியுட னிருக்கப்
பயந்தானுண்டோ புகழான வடிவார மரத்திற்றானும்
கார்த்தருந்து மூலிதனைக்
கையிற்றானும் கவனமுடன் எடுத்துவர நண்ணினாரே
விளக்கவுரை :
[ads-post]
6288. நண்ணியே சர்ப்பமது
சென்றபின்பு நாதாந்தத் தாயாரை மனதிலெண்ணி
குண்ணியே மனதுவந்து
முகமும்வாடி கூறான மூலிதனை எடுக்கவல்லோ
வண்ணமுடன் சிவமாண்பர்
இருவருந்தான் வளமையுடன் உறவுகொண்டாடிகூட
திண்மையுடன் மூலிதனை
யொருதோழன்தான் துப்புரவாய்த் தானெடுக்கக் கண்டிட்டேனே
விளக்கவுரை :
6289. கண்டேனே சிவமாண்பர்
மூலிதன்னை கரந்தனிலே மூலிதனைத்தொட்டபோது
அண்டர்பிரான் மகிமையது
யென்னசொல்வேன் ஆகாகா வையகத்தில் யார்தான்கண்டார்
சண்டமாருதம்போலே
சர்ப்பந்தானும் சட்டமுடன் மூலிதனை வைத்தநேர்மை
தண்டகம்போல் அடியேனும்
கண்டுயேங்கி சட்டமுடன் மகிமைதனைப் பார்த்திட்டேனே
விளக்கவுரை :
6290. பார்த்தேனே சிவமாண்பர் ஒருவர்தானும் பண்பான மூலிதனைக் கரத்திற்றானும்
நேர்த்தியுள்ள மூலிதனை
யென்றயம்பி நேர்மையுடன் கரந்தனிலே எடுக்கும்போது
பூர்த்தியுள்ள மூலியது
என்னசொல்வேன் புகழான வஞ்சனமாய்மூலிதானும்
ஆர்த்தியுடன் சிவமாண்பர்
தோழன்தன்னை வப்பனே இருக்கவது பார்திட்டேனே
விளக்கவுரை :