போகர் சப்தகாண்டம் 6281 - 6285 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6281 - 6285 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6281. கேளப்பா புலிப்பாணி மகனேமைந்தா கீர்த்தியுள்ள மகிமையது என்னசொல்வேன்
ஆளப்பா சிவயோகி இருவர்தாமும் வப்பனே பூவெடுத்த வண்மைதன்னை
மாளப்பா பூவெடுக்குங் காலந்தன்னில் மகத்தான கருஞ்சாரை கண்டுமல்லோ
மீளப்பா போகாமலிருப்பதற்கு மீட்சியுடன் தந்திரங்கள் செய்யலாச்சே

விளக்கவுரை :


6282. தந்திரமா மூலியிட மகிமைதன்னை சதகோடி சூரியருங் கண்டதில்லை 
விந்தையுள்ள சித்தரது திருக்கூத்தப்பா விண்ணுலகு மண்ணுலகுங் கண்கொள்ளாட
சிந்தையுடன் இருமனது ஒன்றதாகி சிறப்புடனே பூவழலை யெடுக்கும்போது
வந்துதல்லோ கருஞ்சாரை காலந்தானும் வளமையுள்ள மகிமையது புதுமைதானே

விளக்கவுரை :

[ads-post]

6283. புதுமையாம் சர்ப்பமது என்னசொல்வேன் புகழாக மூலிதனை மனதுவந்து
கதுமையுடன் கானகத்தில் சென்றுமல்லோ கடிதான மலைகுகைகள் தான்கடந்து
மெதுவான சஞ்சீவி மூலிதானும் மேன்மையுடன் வாய்தனிலே கவ்விக்கொண்டு
பதுமமென்ற சர்ப்பமது இருக்கும் ஸ்தானம் பான்மையுடன் வந்தல்லோ நிற்கலாச்சே

விளக்கவுரை :


6284. நிற்கின்ற மறுசற்பந்தன்னைக்கண்டு நீதியுடன் சிலமாண்பர் இருவர்தாமும்
அற்பமென்று நினையாமல் ஆலோசித்து அறிவுள்ள சர்ப்பமதை கண்ணிற்கண்டு
துப்புரவா யெய்ததொரு சர்பந்தன்னை துணிவுகொண்டு மூலிதனை மணங்கள்வீச
சொற்பெரிய சர்ப்பமது உயிருண்டாக்கி சோறாமல் எழுந்திருக்கக் கண்டிட்டாரே

விளக்கவுரை :


6285. கண்டாரே சர்ப்பமது மூலிதன்னால் கைலாசஞ் சென்றதொரு சர்ப்பந்தன்னை
பண்டுவள மாலையணி கிருஷ்ணன்கொண்ட பாங்கான மூலியது விஷமூலிதானும்
தொண்டல்லோ தான்கொடுத்து உயிருண்டாக்கி கூட்டுறவாய் யழைத்துக்கொண்டு சென்றநேர்மை
சண்டமாருதம் போலேயிருவர் மாண்பர் சட்டமுடன் பிரமித்து திகைத்திட்டாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar