6281. கேளப்பா புலிப்பாணி
மகனேமைந்தா கீர்த்தியுள்ள மகிமையது என்னசொல்வேன்
ஆளப்பா சிவயோகி இருவர்தாமும்
வப்பனே பூவெடுத்த வண்மைதன்னை
மாளப்பா பூவெடுக்குங்
காலந்தன்னில் மகத்தான கருஞ்சாரை கண்டுமல்லோ
மீளப்பா போகாமலிருப்பதற்கு
மீட்சியுடன் தந்திரங்கள் செய்யலாச்சே
விளக்கவுரை :
6282. தந்திரமா மூலியிட மகிமைதன்னை சதகோடி சூரியருங் கண்டதில்லை
விந்தையுள்ள சித்தரது
திருக்கூத்தப்பா விண்ணுலகு மண்ணுலகுங் கண்கொள்ளாட
சிந்தையுடன் இருமனது
ஒன்றதாகி சிறப்புடனே பூவழலை யெடுக்கும்போது
வந்துதல்லோ கருஞ்சாரை
காலந்தானும் வளமையுள்ள மகிமையது புதுமைதானே
விளக்கவுரை :
[ads-post]
6283. புதுமையாம் சர்ப்பமது
என்னசொல்வேன் புகழாக மூலிதனை மனதுவந்து
கதுமையுடன் கானகத்தில்
சென்றுமல்லோ கடிதான மலைகுகைகள் தான்கடந்து
மெதுவான சஞ்சீவி மூலிதானும்
மேன்மையுடன் வாய்தனிலே கவ்விக்கொண்டு
பதுமமென்ற சர்ப்பமது
இருக்கும் ஸ்தானம் பான்மையுடன் வந்தல்லோ நிற்கலாச்சே
விளக்கவுரை :
6284. நிற்கின்ற மறுசற்பந்தன்னைக்கண்டு
நீதியுடன் சிலமாண்பர் இருவர்தாமும்
அற்பமென்று நினையாமல்
ஆலோசித்து அறிவுள்ள சர்ப்பமதை கண்ணிற்கண்டு
துப்புரவா யெய்ததொரு
சர்பந்தன்னை துணிவுகொண்டு மூலிதனை மணங்கள்வீச
சொற்பெரிய சர்ப்பமது
உயிருண்டாக்கி சோறாமல் எழுந்திருக்கக் கண்டிட்டாரே
விளக்கவுரை :
6285. கண்டாரே சர்ப்பமது
மூலிதன்னால் கைலாசஞ் சென்றதொரு சர்ப்பந்தன்னை
பண்டுவள மாலையணி
கிருஷ்ணன்கொண்ட பாங்கான மூலியது விஷமூலிதானும்
தொண்டல்லோ தான்கொடுத்து
உயிருண்டாக்கி கூட்டுறவாய் யழைத்துக்கொண்டு சென்றநேர்மை
சண்டமாருதம் போலேயிருவர்
மாண்பர் சட்டமுடன் பிரமித்து திகைத்திட்டாரே
விளக்கவுரை :