6296. தானான பதாம்புயத்தைக்
கண்டாலல்லோ தாக்கான வசியமூலி வாய்க்கும்பாரு
மானான சிவமாண்பர் மூலிகொண்டு
மகத்தான கானகத்தே செல்லும்போது
பானான பாம்பதுதான் சென்றபாதை
பாங்கான படும்பாதை யென்றேயெண்ணி
கோனான குருதனையே மனதிலுன்னி
கொற்றவனார் மோசமென்று நினைத்திட்டாரே
விளக்கவுரை :
6297. மோசமது வந்ததென்று
மனதிலெண்ணி முனையான சிவமாண்பர் யேதுசெய்தார்
பாசமுடன் கைதனிலே இருந்தமூலி
பட்சமுடன் பூமிதனில் உதறிட்டாரே
நாகமது கொண்டதொரு மூலிதானும்
நற்கமல கரந்தனிலே வீழாமற்றானும்
வீசலுடன் மூலியது
கரத்தைப்பற்றி விருப்பமுடன் கானகத்தில் விழுகலாச்சே
விளக்கவுரை :
[ads-post]
6298. ஆச்சப்பா மூலியது இழுக்கும்போது வப்பனே கூடிருந்த தோழன்தானும்
மூச்சுடனே யவர்கரத்தை
யிவருங்கூடி முனையாகத் தானிழுக்கப் பார்த்தேன்யானும்
கூச்சலுடன் இருவருமே
குய்யோவென்று கூர்மையுடன் மனதுவந்து எண்ணங்கொண்டு
பாச்சலுடன் கரமிருந்த
வாளால்தாமும் பான்மையுடன் கரமதனை துணித்தார்பாரே
விளக்கவுரை :
6299. பாரேதான் கரமதுவுந்
துணிந்தபோது பாங்குடனே மூலியுடன் கானகத்தில்
நேரேதான் கரந்தனையே
மூலிதானும் நேர்மையுடன் தானிழுத்து போகக்கண்டேன்
சீரான சிவமாண்பர்
இருவர்தாமும் சிறப்புடனே மறுபடியும் பதிதிரும்பி
கூரான பூவழலை காய்க்கு மார்க்கம்
குறிப்புடனே வந்துமல்லோ யமர்ந்திட்டாரே
விளக்கவுரை :
6300. அமர்ந்தாரே சிவமாண்பர்
இருவர்தாமும் வப்பனே புலிப்பாணி மைந்தாகேளு
சமர்ந்ததொரு வருட்சமதில்
யீன்னுமாண்பர் சுந்தரனே மறுபடியும் யேங்கிவந்து
சமர்த்துடனே
பூவழலையெடுப்பதற்கு சட்டமுடன் குருசொன்னநீதிபோல
தமர்ந்திடா வண்ணமுடன்
புனிதவான்கள் சட்டமுடன் தானெடுத்தார் புண்யராமே
விளக்கவுரை :