6301. புண்ணியராம் புலிப்பாணி
மைந்தாகேளு புகழான சிவமாண்பர் கரத்தையல்லோ
வண்ணமுடன் சர்ப்பமது
மனதுவந்து வளமையுடன் தன்தேவர் குருநாதர்க்கு
திண்ணமுடன் கரந்தனையே
காட்டவென்று தீர்க்கமுடன் வாய்தனிலே கவ்வியல்லோ
எண்ணறிய நற்பொருளே
யெந்தன்நாதா எழிலான கானகத்தின் வளமைகேளே
விளக்கவுரை :
6302. கேட்கவென்றால் அடியேனுங்
கானகத்தில் கீர்த்தியுடன் பெண்ணய்தானிருந்தோம்
மீட்கமுடன் இரைதேடி போகும்போது
மிக்கான கானகத்தில் யாம்திரிந்தோம்
சூட்சமுடன் பாலையென்ற
வனத்தில் நாங்கள் சுந்தரமே சித்தொளிவே போகும்போது
ஆட்கள்விட்டு ஒருவரையும்
பிரிந்துமல்லோ வையனே கல்லால மரங்கண்டோமே
விளக்கவுரை :
[ads-post]
6303. கண்டோமே சிவசித்து
மாண்பர்தம்மை கைலாசநாதரைப்போல் வேஷங்கொண்டு
உண்டான பொருள்தேடி கற்பமுண்ண
உத்தமரே இருவர்தம்மைக்கண்டேன்யானும்
விட்டதொரு வழலையென்ற
முப்பூதன்னை விருப்பமுடன் எடுக்கவந்த மாண்பர்தம்மை
சண்டமாருதம்போல
துரத்தியானும் சாங்கமுடன் சீறலது சீறினேனே
விளக்கவுரை :
6304. சீறியே யோடுகையில்
மாண்பர்தாமும் சிறப்பான கல்லாலின் மரத்தின்பேரில்
மீழியே எனைக்கண்டு
பயந்தொடுங்கி மீளாத மரத்தின்மேல் ஏறிநின்றார்
வீரியமாய் அப்பாலே
எந்தனைத்தான் விட்டல்லோ கொண்டுமே சிதைத்துப் போட்டார்
கீரியென்னும் விஷமூலி
தன்னைத்தானும் கிருபையுடன் எந்தனுக்குக் கொடுக்கலாச்சே
விளக்கவுரை :
6305. கொடுக்கவே என்சேனை
பிணையிலொன்று கொப்பெனவே நானிறந்த பாவனத்தை
அடுத்துமே கண்டல்லோ
வாலோசித்து ஐயனே குருமூலி தேடிவந்து
அடுத்திருந்த எந்தன்முன்
வந்துநின்று பாங்கான மூலிதனை முகத்தில்வைக்க
நடுத்தலையில் வில்லறுந்த
நாணிபோலே நாதனே உயிர்கொண்டு வந்திட்டேனே
விளக்கவுரை :