6316. பார்த்தேனே யவரவர்கள்
செய்தநூலை பாங்கான சமாதிமுகம் நின்றுகொண்டு
நேர்த்தியுள்ள பெருநூலாங்
கிரந்தங்கோடி நெடிதான விரிநூலுஞ் சுருக்கங்கோடி
பூர்த்தியுடன் அவரவர்க்கு
யிதவுகூறி புகழான சாத்திரத்தைக் கையிற்பற்றி
தீர்த்தமுடன் சிவலிங்க
பதியில் சென்று சிற்பரனே நூல்களை யாம்பூசித்தேனே
விளக்கவுரை :
6317. பூசித்தேன் அதிதமென்ற
நூல்கள்தம்மை புகழான சீனபதி மாண்பருக்கு
வாசித்தேன் சந்தேகந்
தெளிவுநீங்கி வாகுடனே கருவிகரணாதியந்தம்
நேசித்தேன் சீனபதி
பெண்களைத்தான் நெடிதான சாத்திரத்தின் மார்க்கங்கண்டு
ஆசித்தேன் நெடுங்கால
மங்கிருந்தேன் வப்பனே குளிகைகொண்டு பறந்திட்டேனே
விளக்கவுரை :
[ads-post]
6318. பறந்தேனே குளிகையது பூண்டுகொண்டு பாங்கான யிமயகிரி மேற்கேயப்பா
சிறந்ததொரு புவனமென்ற
கிரியில்யானும் சிற்பரனே குளிகைவிட்டு இறங்கியேதான்
நிறைந்ததொரு குகைதனிலே
சென்றேன்யானும் நெடிதான தேவரிஷி கோடாகோடி
குறைந்ததொரு கணக்கதுவும்
லக்கோயில்லை கோடானகோடி சித்துமுனி கண்டேனே
விளக்கவுரை :
6319. கண்டதொரு சித்துமுனி
ரிஷியார்தாமும் கைலாசபுவனகிரி தன்னிற்றானும்
அண்டமுடி போகாமல்
யாகஞ்செய்து வப்பனே தானிருக்குங் காலந்தன்னில்
தண்டறிகமான தொருகானகத்தில்
தாட்டீகமுள்ளதொரு செந்தேளப்பா
சண்டமாருதம்போலே
ரெக்கைகொண்டு சட்டமுடன் இறங்கிநிற்கப் பார்த்திட்டேனே
விளக்கவுரை :
6320. பார்த்தேனே புவனகிரி
சிகரந்தன்னில் பாங்கான செந்தேளின் கொடூரந்தன்னை
தீர்த்தமுடன் சிகரம்விட்டு
மேலேநோக்கி திகழான கொடிமுனையைப் பற்றிநின்று
வேர்த்துடலும் விஷமதுவும்
தலைகொண்டேறி மிக்கான சிகரமென்ற செம்புதன்னை
ஆர்த்துமே தானோக்கி
கொட்டும்போது வழகான செம்பதுவும் உருகிப்போச்சே
விளக்கவுரை :