6311. நீக்கினால் வெகுகோடி புண்ணியந்தான்
நிட்களங்கமானதொரு மாண்பருக்கு
ஆக்கமுடன் கரந்தனையே
ஒட்டிக்கொள்ள வப்பனே மூலியது கொண்டுவந்து
நோக்கமுடன் தான்கொடுத்து
வனுப்பினாக்கால் நெடிதான விரலதுவும் விருட்சந்தன்னில்
பாக்களவு பிறந்ததொரு
கதையைப்போலே பாங்கான விரலதுவும் ஒட்டும்பாரே
விளக்கவுரை :
6312. ஒட்டுமே பின்னுமந்த
மாண்பர்தாமும் ஓகோகோ வழலைதனைத் தானெடுக்க
கிட்டியே மறுபடியும்
வருவாரங்கே கீழானனவிரலதுவும் அவரைக்கண்டு
எட்டியே தான்துரத்தி
கையிலொட்டி எழிலான வங்கமது பங்கம்நீக்கி
சுட்டியே சிவமாண்பர்
தானுமப்பா சொஸ்தமுடன் கைகொண்டு வாழ்குவாரே
விளக்கவுரை :
[ads-post]
6313. வாழ்ந்தாலே தந்தமக்கு
மோட்சமுண்டு வளமான கீர்த்தியது வதிகமுண்டு
ஆழ்ந்த தொரு வார்த்தைக்குக்
குறைவில்லாமல் அங்ஙனவே மூலியது வாராய்ந்தல்லோ
தாழ்ந்துமே குருபாதம்
வாக்குதப்பி தானடைந்தால் குருவுக்குப் பாவமென்று
சூழ்ந்துமே குருவுரைத்த
வாக்குபோலே சூட்சமுடன் செய்யவல்லோ எண்ணலாச்சே
விளக்கவுரை :
6314. எண்ணவே யின்னமொரு மார்க்கஞ்
சொல்வேன் எளிதான புலிப்பாணி மகனேபாரு
வண்ணமுடன் காலாங்கி
கிருபையாலே வளமையுடன் லோகபதி எல்லாங்காண
திண்ணமுடன் குளிகையது
பூண்டுகொண்டு தீர்க்கமுடன் சீனபதி சென்றேன்யானும்
அண்ணலெனும் பதாம்புயத்தை
யானுங்கண்டு வப்பனே காலாங்கி வரம்பெற்றேனே
விளக்கவுரை :
6315. பெற்றதொரு வரத்தினால்
அனேகம்பெற்று பேரான பேரின்ப வீடறிந்து
கற்றதொரு சிவயோகி தவக்கியானி
கைலாச சட்டமுனி நாதர்கூட்டம்
சுற்றுமுள்ள திருமூல
வர்க்கத்தோரும் சுந்தரானந்தரொடு ரோமந்தானும்
மற்றுமுள்ள சித்தாதி
சித்தரெல்லாம் மகிட்சியுடன் மலைதனிலே பார்த்திட்டேனே
விளக்கவுரை :