6321. உருக்கியே செம்பதுவும்
மலையோரத்தில் வுத்தமனே பாய்ந்துமல்லோ லிங்கமாச்சு
மெருகான லிங்கமது செம்புமாகி
மேன்மையுள்ள சமாதியென்ற பீடமாச்சு
திருவான பீடமது சித்தர்கண்டு
தீரமுடன் சிவலிங்க மென்றுசொல்லி
பருவமுடன் அமாவாசை
காலந்தன்னில் பட்சமது குருபூசை செய்வார்தானே
விளக்கவுரை :
6322. தானான பூசையது செய்யும்போது
தாக்கான சிவலிங்கந் தன்னில்நின்று
தேனான ஜலமதுவும் முத்துபோலே
தேற்றமுடன் சிவலிங்கந் தன்னிற்பொங்கி
கோனான விஷமதுவும் பொங்கியல்லோ
கொப்பெனவே ஜலமதுவாய் சுத்திநிற்கும்
பானான நிலமதனை
எடுத்துசித்தர் பாங்குடனே சீசாவில் அடைப்பார்பாரே
விளக்கவுரை :
[ads-post]
6323. பாரேதான் ஜலமதனை
எடுத்துமல்லோ பாங்கான செம்பதனை யுருக்கிக்கொண்டு
நேரேதான் ஆயிரமாங்
களஞ்சிதானும் நேர்மையுடன் தானுருவங் காலந்தன்னில்
சேரேதான் இருக்குமுகந்
தன்னிலப்பா சேர்வைகண்டு விஷநீரை தாக்குவார்பார்
கூரேதான் ஆயிரத்துக்கோர்
களஞ்சிகொடுத்து வுருக்கியல்லோ எடுப்பார்காணே
விளக்கவுரை :
6324. காணவே ஆயிரத்து எட்டுமாற்று
கனமான தேவேந்திரன் தங்கமாச்சு
பூணவே தங்கமது பிறவித்தங்கம்
புகழான சித்துமுனி வழங்குந்தங்கம்
வீணவே பூசைக்கு
வுதவுந்தங்கம் வேறுபடாத் தங்கமது சுயம்புத்தங்கம்
நீணவே கைலாசநாதர்தாமும்
நீதியுடன் வீற்றிருக்கும் பீடந்தானே
விளக்கவுரை :
6325. பீடமாம் ஆயிரங்கண்
இந்திரர்க்கு பெரான வாசனத்தின் தங்கமாகும்
கூடகோபுரந்தனுக்கு
சிகரந்தங்கம் குவலயத்தில் மாண்பர்களுங் காணாத்தங்கம்
மாடமாளிகை நெருங்கும்
மன்னர்தாமும் மார்க்கமுடன் ஆதீனத் தங்கமாகும்
தேடறியா நாதாக்கள்
ரிஷிகள்தேவர் தோற்றமுடன் கண்டதொரு தங்கமாமே
விளக்கவுரை :