போகர் சப்தகாண்டம் 3131 - 3135 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 3131 - 3135 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3131. போடேதான் பில்லையது காய்ந்தபின்பு பொங்கமுடன் பேரண்டஞ் சுத்திசெய்து
நீடேதான் வகல்தனிலே கீழ்பரப்பி நேர்மையுடன் பில்லைதனை மேலேவைத்து
தூடேதான் மேலுமந்த பொடியைப்போட்டு துப்புறவாய் மெல்மூடி சீலைசெய்து
காடேதான் ரவிதனிலே காய்ந்தபின்பு கனமாகக் கோழியென்ற புடந்தான்போடே

விளக்கவுரை :


3132. புடமதுதான் தீயாறி எடுத்துப்பாரு பொங்கமுடன் சுண்ணாம்பு மட்டிபோலாம்
திடமுடனே பத்துமுறை இப்படியேபோடு திறமான சுண்ணமது வாகும்பாரு
தடமான சுன்னமது எடுத்துக்கொண்டு தகமையுடன் பேரண்டம் சிற்றண்டத்தோடு
கடமான சிப்பியொடு நண்டுதானும் கருவான நத்தையொடு சமனவாமே

விளக்கவுரை :

[ads-post]

3133. நத்தையுடன் இவையெல்லாம் ஒன்றாய்க்கூட்டி நலம்பெறவே சிற்றண்டக் கருவாலாட்டி
முத்திபெற மூசையிட்டு வூதிப்பாரு உத்தமனே சுண்ணாம்பா யிருக்கும்பாரு
பத்தியுடன் வுலையில்வைத்து வூதும்போது பாங்கான சுண்ணாம்பாயிருக்கும்பாரு
வெத்தியுடன் சுன்னமதை எடுத்துக்கொண்டு வேதாந்தத் தாயினது வருளைப்போற்றே

விளக்கவுரை :


3134. போற்றியே சுண்ணாம்பைத்தானெடுத்து புகழாக மூசையொன்று பிடித்துமேதான்
ஆற்றியே முன்சொன்ன முப்புசுன்னம் அப்பனே தானெடுத்து மூசையிட்டு
தூற்றியே தேவதைக்குப் பூசைசெய்து துறைபோல முறைபோல சீலைசெய்து
மாற்றியே சுண்ணாம்புச் சீலைசெய்து மயங்காமல் புடம்போட நீறிப்போமே

விளக்கவுரை :


3135. நீறியதோர் பற்பத்தை எடுத்துக்கொண்டு நினைவாக இப்படியே பத்துமுறைபோடு
கூறியதோர் பற்பமது குருபற்பமாச்சு குணமான காரமென்ற காலனாகும்
மீறியதோர் சரக்கெல்லாங் கொல்லுங்காலன் மிக்கான பற்பமது குருவுமாகும்
தேறியதோர் பற்பமதில் எந்தபாகம் தெளிவாகச் செய்தாலும் தாக்கிடாயே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar