போகர் சப்தகாண்டம் 3161 - 3165 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 3161 - 3165 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3161. வாழ்ந்திட்ட காலமது தன்னிலேதான் வாகுடனே மாந்தரெல்லா மொன்றாய்கூடி
தாழ்ந்திட்ட ரிஷிகோடிமுனிவருக்கு தகமையுடன் லேகியத்தை செய்யவென்று
ஆழ்ந்திடவே தம்கருத்தில் மனதிலுண்ணி அப்பனே சீனபதி மார்க்கஞ்சென்று
சூழ்ந்திட்ட போகரைதான் அடிவணங்கி சூட்சமுடன் பாகமதை யறிந்தார்தாமே

விளக்கவுரை :


3162. அறிந்துமே காயகற்ப லேகியத்தை அன்புடனே நாதாந்த ரிஷிகளுக்கு
செரிந்துமே பாகமுடன் செய்துமேதான் சிறப்புடனே யுண்பதற்குக் கற்பமீந்தார்
முறிந்துமே யானந்த கற்பந்தன்னை முப்பொழுதும் உண்டுமல்லோ களித்துமேதான்
வெறிந்துமே சினமதுவும் ஒடுங்கியேதான் வெட்டவெளி தனிலிருந்து கும்பித்தாரே

விளக்கவுரை :

[ads-post]

3163. கும்பித்து நிற்கையிலே சிவயோகிதானும் குவலயத்தில் மானிடர்மே லிச்சைகொண்டு
தம்பநங்கள் முதலான வசியமார்க்கம் ஜெகத்திலே வஷ்டவித கர்மம்யாவும்
சும்பனமாம் கொக்கோக லீலையாவும் சூட்சாதி சூட்சமெல்லாம் சுலுவாய்ச்சொல்லி
சம்போகத்தி லிருந்துகொண்டு சதாநிஷ்டையாவும் சட்டமுடன் தாமறிந்தார் பலமாந்தர்தாமே

விளக்கவுரை :


3164. தாமான சித்தர்களும் முனிவர்தாமும் சதகோடி சூரியர்போல் பிரகாசித்து
பூமானாங் கருவாளி யானபேர்க்கு புகழுடனே யிப்பாகஞ் சொன்னாரல்லோ
காமானமாகவேதான் காயகற்பம் கருத்துடனே செய்தார்கள் மனுக்கள்கோடி
நாமேதான் சொல்லிவிட்டோம் மறைப்பையெல்லாம் நலமுடனே நாதாக்கள் செய்வார்பாரே

விளக்கவுரை :


3165. பாரேதான் லேகியத்தின் பெருமைகேளு பாருலகில் அறிந்தமட்டும் சொல்வேன்பாரு
நேரேதான் தூதுளங்காய் பிரமானந்தான் நேர்மையுடன் உண்டவர்க்கு முறைமை சொல்வேன்
சேரேதான் ஆவின்பால் கொள்ளவேண்டும் செம்மையுடன் அவர்தமக்கு காட்சிமெத்த
கூரேதான் கெவனமுடன் குளிகைகொண்டு கொற்றவனே வதிசயங்கள் சொல்வார்காணே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar