போகர் சப்தகாண்டம் 3166 - 3170 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 3166 - 3170 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3166. காணவே வானுலகில் போகுஞ்சித்தர் கண்ணுக்குற்றேற்றுவது மெய்போலாகும்
பூணவே சூரியனும் எதிரேநிற்பான் பொங்கமுடன் சந்திரனும் தூரேநிற்பான்
வேணவே லாகிரிகளுண்டபோது வெகுவான வினோதவகை சொல்லலாகும்
தோணவே நேத்திரங்களி லிருந்துகொண்டு தொல்லுலகில் கண்டதெல்லாம் பினத்துவாரே

விளக்கவுரை :


3167. பினத்துவார் ஆகாசமார்க்கந்தன்னை பெருமையுடன் அதிசயங்கள் மிகவுஞ்சொல்வார்
நினைப்புடனே கண்ணுக்கு தோற்றம்யாவும் நிலையான வதிசயம்போல் கூறுவார்கள்
புனப்புடனே பித்தமது மேலேசொக்கி புகழான கபாலத்தை வரட்சிசெய்யும்
தினப்புடனே சரரிரமெங்கும் தினவுண்டாகும் திரளான தேகமது சொக்கிப்போமே 

விளக்கவுரை :

[ads-post]

3168. சொக்கவே காயாதி பூரணத்தால் தொல்லுலகில் அதிதவகை மெத்தக்கூறும்
சிக்கவே மலைகுகைகள் வனாந்திரத்தில் சிறப்புடனே சித்தர்களைக் கண்டேனென்பார்
ஒக்கவே யவர்களிடம் கூடிருந்து உத்தமனே காயகற்பங் கொண்டேனென்பார்  
தக்கவே கைலங்கிரி கண்டேனென்பார் சாயுச்சிய போதையிலே இருந்தார்பாரே

விளக்கவுரை :


3169. போதையிலே ஞானமுண்டு வருளுஞ்சொல்வார் பொங்கமுடன் அதிசயங்கள் வினோதஞ் சொல்வார்
தீதையிலே கற்பமது வுண்டபோது திரளான தத்துவங்கள் மிகவுஞ்சொல்வார்
பாதையிலே இருந்துகொண்டு கண்ணைமூடி பாரினிலே பரிபாச வார்த்தைசொல்வார்
வாதையிலே யன்னமது தேவையில்லை வைகுண்டபதிதனிலே கேட்பார்பாரே

விளக்கவுரை :


3170. கேட்கையிலே லாகிரிகள் மிகவும்மிஞ்சி கெடிதான வடிதடிகள் மிகவுண்டாகி
மூட்கமுடன் கீழ்விழுந்து பிரண்டெழுந்து முனையான கும்பகத்திலிருப்பேனென்று
தாட்கமல பீடமதில் வீற்றிருக்கும் தாயான மஹேஸ்பரியை காண்பேனென்றும்
சூட்சமுடன் சுந்தரனார் தானென்று சொல்லுவார் பலதுதியுஞ் சொல்லுவாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar