போகர் சப்தகாண்டம் 3281 - 3285 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 3281 - 3285 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3281. தேடயிலே செந்தூரம் ஐம்பதாகும் தேற்றமுடன் புடிமதுவும் அதிகங்கொண்டால்
கூடயிலே செந்தூரங்காரமேறி குறிப்புடனே காயாதிக்குறுதியாச்சு
நீடயிலே இப்படியே தீர்ந்தாயானால் நீனிலத்தில் நீயுமொரு சித்தனாவாய் பாடயிலே
ஒருவருந்தான் சொல்லவில்லை பாரினிலே இந்நூல்போல் ஒருநூலுண்டோ

விளக்கவுரை :


3282. உண்டேதான் வையகத்தில் பலநூலுண்டு உத்தமனே சாத்திரங்கள் கோடியுண்டு
கண்டேனே நானும்வெகு நூல்கள்தன்னை கவடமற்ற நூலிதுதான் மெய்நூலாகும்
திண்டான வேதமுனி நூல்கள்சொன்னார் திகழுடனே காசினியி லனேகமுண்டு
கொண்டான கொண்டபடி வினோதஞ்சொன்னார் குவலயத்தில் இந்நூல்போலில்லைதாமே

விளக்கவுரை :

[ads-post]

3283. தானான செந்தூரஞ் சாற்றக்கேளு தகமையுடன் புளியாரைச் சாற்றினாலே
பானான செந்தூர மறைத்துமேதான் பதமுடனே பில்லைதட்டிக் காயவைத்து 
வேனான வோட்டிலிட்டுச் சீலைசெய்து விருப்பமுடன் கெஜபுடத்தில் போட்டாயானால்
கோனான குருநாதர் சொன்னவாக்கு குவலயத்தில் பொய்யாது மெய்யாம்பாரே  

விளக்கவுரை :


3284. பாரேதான் செந்தூரங் காரமேறி பாகமுடன் காயாதிகற்பமாகும்
வேரேதான் வைத்து பத்துபுடமேபோடு நெறியான புடமதுவுந் தப்பாவண்ணம்
கூரேதான் சொன்னபடி செந்தூரிக்கும் கூர்பான காரமது சொல்லப்போமோ
வேரேதா னின்னமொரு மார்க்கம்சொல்வோம் வேதாந்தத் தாயினது வருள்தான்காணே

விளக்கவுரை :


3285. காணவென்றால் இன்னமொரு மார்க்கம்பாரு கருவான செந்தூரப்போக்குசொல்வேன்
தோணவே செந்தூரந் தனையெடுத்து துறையுடனே கல்வமதிலிட்டு மைந்தா
பூணவே பூநீறு முப்புச்சுண்ணம் புகழாகத் தான்போட்டு எட்டிலொன்று
வேணவே பொன்னினாவாரையாலே விருப்பமுடன் தானரைப்பாய் சாமம்நாலே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar