போகர் சப்தகாண்டம் 3286 - 3290 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 3286 - 3290 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3286. நாலான சாமமது வரைத்தபோது நயமுடனே வெண்ணையது போலேயாகும்
பாலகனே வெண்ணையது இதற்கொவ்வாது பாலகனே சித்தர்முகம் வேதையாச்சு
சேலான வனமூலிதன்னையப்பா செம்மையுடன் தான்கூட்டியரைத்தபோது
மாலான சத்தெல்லாம் மடிந்துமேதான் மகத்தான செந்தூரம் மடியலாச்சே

விளக்கவுரை :


3287. ஆச்சென்று விடுகாதே மைந்தாகேளு வப்பனே பில்லையது தட்டியேதான்
காச்சலென்ற ரவிதனிலே காயப்போடு கருவான ஓட்டிலிட்டுச் சீலைசெய்து
பாச்சலுடன் கெஜபுமாய்போட்டுத்தீரு பாலகனே யாறியபின் எடுத்துப்பாரு
மூச்சடங்கலிப் புடமதுதான் வெந்துதானால் மோசமில்லை வாராதன்றே

விளக்கவுரை :

[ads-post]

3288. வாராது தோஷமது நேராதல்லோ வகுப்பான செந்தூர முறுதிகாணும்
நேரான செந்தூரந் தனையெடுத்து நேர்மையுடன் கல்வமதிலிட்டுபின்னும்
சேரான பொன்னினாவாரை மூலிசேரவேதான் விட்டுவரைத்துமேதான்
நீரான மைபோலரைத்துமல்லோ நிஷ்களமாய்ப் பில்லையது தட்டிப்போடே

விளக்கவுரை :


3289. போடவே ரவிதனிலே காய்ந்தபின்பு பொங்கமுடன் ஓட்டிலிட்டுச் சீலைசெய்து
நீடவே கெஜபுடமாய் போட்டாயானால் நீரான செந்துரமென்னசொல்வேன்
கூடவே இப்படியாய் ஐந்துபத்து கொற்றவனே புடமதுதான் தீர்ந்தாயானால்
நாடவே செந்தூர மென்னசொல்வேன் நாதாக்கள் கைமறைப்பு கண்டுபாரே

விளக்கவுரை :


3290. பாரேதான் சித்தர்முனி ரிஷிகள்தாமும் பாருலகில் செய்வதுதான் அதீதமார்க்கம்
நேரேதான் பலநூலுங் கண்டாராய்ந்து சிறப்புடனே அனேகவித காயகற்பம்
சீரேதான் தான்முடித்தார் லக்கோயில்லை
வேரேதான் வனேகநூல் யானுங்கண்டேன் வுற்பனத்தை யுளவறிந்து சொல்லார்தாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar