போகர் சப்தகாண்டம் 3291 - 3295 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 3291 - 3295 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3291. தாமான கருவெல்லாம் மறைத்துப்போட்டார் தகமையுடன் திருமூல வர்க்கத்தார்கக்
நாமேதான் சொன்னபடி நூலாராய்ந்து நாட்டிலுள்ள வளப்பமெல்லாம் கண்டார்பாதி
தேமேதான் காயாதி கற்பசாங்கம் தெளிவாகச் சொன்னவர்கள் ஒருவரில்லை
பூமானங் காலாங்கிநாதர்தாமும் புகழுடனே பாடிவைத்தார் கோடியாமே

விளக்கவுரை :


3292. கோடியாஞ் சித்தர்களில் ஒருவருண்டு கூறினார் பலபலவாங் கண்டாராய்ந்து
தேடியே மானிடர்கள் பிழைக்கவென்று தெளிவாகப்பாடிவைத்தார் சித்தர்தாமும்
பாடியதோர் நூலெல்லாம் பழுதாராய்ந்து பாரினிலே பலபலவாம் பேதஞ்சொன்னார்
நாடியே போகரிஷி அடியேன்தானும் நயம்பெறவே யுலகமதில் நவின்றிட்டேனே

விளக்கவுரை :

[ads-post]

3293. நவின்றிட்டே னின்னமொரு கருமானங்கேள் நாட்டிலுள்ள மாணாக்கள் பிழைக்கவென்று
நவின்றிட்ட சாத்திரங்கக் யுத்தாயுத்தம் தன்மைபெற வெகுசுளுவாய் ஆராய்ந்தேதான்
புவின்றிட்டேன் பொன்னினூமத்தை தன்னால் கருவாகத் தானரைப்பாய் சாமமெட்டே

விளக்கவுரை :


3294. எட்டான சாமமது செந்தூரத்தை எழிலாக தானரைப்பாய் மைந்தாநீயும்
திட்டமுடன் மைபோலதானரைத்து தீர்க்கமுடன் பில்லையது லகுவாய்த்தட்டி
சட்டமுடன் ரவிதனிலே காயவைத்து சாங்கமுடன் ஓட்டிலிட்டுச் சீலைசெய்து
வட்டமென்ற குழிதனிலே எருவடுக்கி வாகுடனே புடமதுவும் போடுபோடே

விளக்கவுரை :


3295. போட்டவுடன் தீயாறி எடுத்துப்பாரு பொலிவான செந்தூரமென்ன சொல்வேன்
நீட்டமுடன் செந்தூரங்காரமேறி நீனிலத்தில் காயாதிகற்பமாச்சு
வாட்டமுடன் செந்தூரமிந்தபாகம் வன்மையுடன் வைந்துபத்து புடந்தான்போடு
தாட்டிகமாய் செந்தூரம் அருணன்போலாம் தாரிணியில் ஒருவருந்தான் செய்யார்தாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar