போகர் சப்தகாண்டம் 3296 - 3300 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 3296 - 3300 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3296. தானான செந்தூர மதீதவித்தை தாரிணியில் ஒருவருந்தான் செய்ததில்லை
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் தம்பதியில் அடியேன்சென்று
வேனான சாத்திரத்தின் உளவுபார்த்து வேகமுடன் சீனபதிசென்றுயானும் 
பானான குளிகைதனை பூண்டுகொண்டு பறந்திட்டேன் சீனபதிதேசங்காணே

விளக்கவுரை :


3297. காணவே சீனபதி சென்றேன்யானும் கமலமுனி சீர்பாதங் கண்டுபோற்றி
வேணவுப சாரமது மிகவுஞ்செய்து வெற்றியுடன் குளிகையது பூண்டுகொண்டு
பாணமது போலெழும்பி யடியேன்தானும் பக்கலென்ற சமாதியது நின்றேன்யானும்
நாணவே தலைகுனிந்து நின்றபோது நாதராங் கமலமுனி விடைசொன்னாரே

விளக்கவுரை :

[ads-post]

3298. விடையொன்று சொல்லுகையில் அடியேன்தானும் விருப்பமுடன் வுத்தாரஞ்சொல்லுற்றேன்
தடையில்லா வாக்கதுவுங் கமலர்தாமும் தாட்சியுடன் எந்தனுக்கு உரைத்ததாலே
மடைபோன்ற செந்தூர காயகற்பம் மகதேவர் மகிட்சியுடன் செய்யலுற்றார்
இடையூறு வாராமல் எந்தனுக்கு எழிலான வாக்கதுவுங் கொடுவென்றேனே

விளக்கவுரை :


3299. கொடுவென்று கேட்கையிலே சித்துதாமும் கொப்பெனவே எந்தனுக்குச் சாபந்தீர்ந்து
படுமுன்னே சரக்கெல்லாம் கட்டிப்போக பாரினிலே காயாதிகற்பந்தானும்
தொடுகுறி போலெந்தனுக்கு வுளவுஞ்சொல்லி தோஷமது போவதற்கு முறையுஞ்சொல்லி
விடுவகலும் பிணிநீங்கக் காயகற்பம் விருப்பமுடன் வாக்களித்தார் முறையுந்தானே

விளக்கவுரை :


3300. தானான கமலமுனிநாதர்தாமும் தகமையுடன் எந்தனுக்கு வாக்களித்தார்
கோனான காலாங்கி நாதர்பாதம் கும்பிட்டு வடியேனுந் தாள்பணிந்து  
தேனான சாத்திரத்தை கண்டாராய்ந்து திரட்டிவைத்தேன் போகரேழாயிரந்தான்
பானான காலாங்கிதனைநினைத்து பாடிவைத்தேன் சத்தகாண்டம் பண்பாய்த்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar