3311. கணக்கில்லை காலன்வந்தணுக
மாட்டான் காசினியில் வெகுகால மிருக்கலாகும்
பிணமாகி மூச்சடங்கி
இருந்திட்டாலும் பேருலகில் உன்னையொரு சித்தனென்பார்
ஷணநேரம் வாசியைநீ
நடத்திட்டாலும் சதாசிவன்தான் நீயென்று சொல்லுவார்கள்
மணமுடனே பூமிதனில் வாழலாகும்
மண்ணுலகில் வேந்தரெல்லாம் நடுங்குவாரே
விளக்கவுரை :
3312. நடுங்குவார் உனைக்கண்ட
சீஷவர்க்கம் நாடோறும் உந்தனுக்கு பணியேசெய்து
ஒடுங்கியே உந்தனிட
பக்கஞ்சென்று வுபசார வார்த்தைகளும் அதிகம்பேசி
கொடுந்தவசியானதொரு
வுந்தனுக்கு கோபமது வாராமல் முன்னேநின்று
படுந்துயர மிகவாகி
மனதிலெண்ணி பட்சமுடன் சதாநித்தஞ் சேவிப்பாரே
விளக்கவுரை :
[ads-post]
3313. சேவிப்பார் தவநிலையில்
ஒடுங்கிநின்று சேர்வையுடன் காட்சிதனைக்காணவென்று
கோவிப்பு வாராமல்
குருவைத்தானும் கொற்றவனு மெந்நாளும் பணிந்துநின்று
தாவிப்பாம் சோடசோபாரத்தோடு
தண்மையுடன் ஏவலுக்கு முதலாய்நின்று
சாவிப்பு வாராமல்
புனிதவானாய் சதகோடி காலம்வரை பணிசெய்வாரே
விளக்கவுரை :
3314. பணியான நீயுமொரு
சித்தனைப்போல் பாலகனே எந்நாளுமிருப்பதற்கு
அணியான சிவயோகந்
தன்னிற்சென்று ஆத்தாளை சதாநித்தம் பூசித்தேதான்
துணிவோடு சமாதிநிலை
நின்றுகொண்டு துப்புறவாய் மேல்மூச்சு தனையடக்கி
மணியான பூரகத்தை மேலேநோக்கி
மார்க்கமுடன் லனாகதத்தைப் பூட்டிப்பாரே
விளக்கவுரை :
3315. பூட்டிமிகப் பார்க்கையிலே
பொலிவு தோன்றும் பொங்கமுடன் கழுத்திதனை மேலிறுத்தி
ஆட்டுமந்தை தனிவோணாய்ப்
புகுந்தாற்போல வப்பனே அஷ்டாங்கந் தன்னிற்சென்று
கூட்டுமுறை வகையறிந்து சிவயோகிதானும்
குணமுடனே யங்கசித்தி பெற்றுக்கொண்டு
பாட்டுநயமறிந்துமல்லோ
பாரின்மீது பாரமுடன் தவசிருத்தல் மெத்தநன்றே
விளக்கவுரை :