போகர் சப்தகாண்டம் 3321 - 3325 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 3321 - 3325 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3321. பேரான வழிதனிலே வதீதம்பூண்டு பேருலகில் நீயுமொரு சித்தனைப்போல்
தூரான கெட்டவழி சொல்லாமற்றான் துரைராஜ் சுந்தரன்போலிருந்துகொண்டு
வாரான சாத்திரத்தின் வண்மைபார்த்து வண்மையுடன் வாதமதை யறிந்துகொண்டு
தேரான யோகமதை நிலைநிறுத்தி தேற்றமுடன் யோகநிலை திடமுந்தேடே

விளக்கவுரை :


3322. தேடையிலே விட்டகுறை நேர்ந்துதானால் தெளிவுடனே யுந்தனுக்கு லபிக்கும்பாரு
கூடயிலே வாசன்தானில்லாவிட்டால் கொற்றவனே காயாதிகற்பம்போதும்
பாடையிலே சென்றாலும் திரேகம்போமோ பாரினிலே தெரியாமலிருந்தார்கோடி
நீடையிலே காயாதிசெந்தூரந்தான் நிலைத்துதடா தேகமது கற்றூணாச்சே

விளக்கவுரை :

[ads-post]

3323. கற்றூணாம் பொற்றூணாம் கருங்கல்லாகும் காசினியில் காயாதி கற்பமாச்சு
நற்றூணாம் காயாதி செந்தூரந்தான் நாயகனே முக்கோடி தவஞ்செய்தாலும்
சற்குணனாம் வீராதிவீரன்போலும் பாரினிலே சதகோடிசூரியன்போல்
துற்குணங்கள் தானகன்று சித்தனாவாய் துரைராஜ சிவயோகி நீயாவாயே

விளக்கவுரை :


3324. ஆகையிலே செந்தூர முண்ணபேர்க்கு அவனிதனில் நரையில்லை திரையுமில்லை
சாகையிலே சேத்துமங்கள் அணுகிடாதே செத்தாலும் ஆவியது வெளிபோகாது
போகையிலே தவஞ்செயினும் சிரசுக்குள்ளே பொங்கமுடன் தான்வசித்து கற்பகாலம்
வேகையிலே தீயதின் வெந்திட்டாலும் வெகுசுறுக்காய் தேகமது துள்ளும்பாரே

விளக்கவுரை :


3325. பாரேதான் தேகமது துள்ளும்போது பாரினிலே ஜெகஜால வித்தையென்பார்
நேரேதான் சவமுகத்தில் நிற்கும்போது நெருப்பான தணலதுவு மவிந்துபோகும்
கூரான மானிடர்கள் சொல்வதென்றால் குவலயத்தில் ஜெகஜால வித்தையென்பார்
தூரேதான் மசானமதிலிருந்துகொண்டு துப்புறவாய் சவமதனை பழிசொல்வாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar