போகர் சப்தகாண்டம் 3326 - 3330 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 3326 - 3330 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3326. பழியான செந்தூரங் காயகற்பம் பாருலகிலுண்டவர்க்குக் காயம்போகா
வழியான செந்தூரம் யார்தான்செய்வார் வண்மையுள்ள சிவயோகி தானேசெய்வான்
மொழிவான கருவாளி யானமாந்தர் மோசமின்றி காசுதனை செலவுசெய்து
கழியான செந்தூரப்போக்குதன்னை கனமுடனே செய்பவனே புனிதனாமே

விளக்கவுரை :


3327. புனிதனாம் இன்னமொரு மார்க்கம்பாரு புகழான செந்தூரஞ் செப்பக்கஏளும்
வனிதமுடன் வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று வாகுடனே தானுருக்கி குருவொன்றீய
கனிவான கரியோட்டிலூதிப்போடு கருவான செம்பதுவும் கொஞ்சம்நீங்கி
தனியான வெள்ளியது வரணமேறி தகமையுடன் பொன்னென்ற மாற்றுமாச்சே

விளக்கவுரை :

[ads-post]

3328. ஆச்சப்பா குடவனிலே பத்துக்கொன்று அப்பனே பாச்சிடவே மாற்றெட்டாகும்
மாச்சப்பா செம்புதனில் பத்துக்கொன்று பாங்குபெற மாற்றதுவும் எட்டதாகும்
பேச்சப்பா பிசகொன்று மில்லைதானும் பேரான தங்கமது பத்துக்கொன்று
மூச்சப்பா விடுகாமல் உருக்கியேதான் முதன்மையுடன் தானெடுக்கக் கலங்குமாமே

விளக்கவுரை :


3329. களங்கான தங்கமதை எடுத்துக்கொண்டு கருணையுடன் வெள்ளிதனில் பத்துக்கொன்று
விளங்கவே தானுருக்கி யெடுத்துக்கொண்டு வேகமுடன் வாரடித்துப் புடத்தைப்போடு
அளங்கமுடன் தங்கமது விளையும்பாரு அப்பனே சிவத்துக்கு வுருக்கித்தங்கம்
நளங்கமுடன் சிவராஜயோகஞ்சென்று நாட்டிலே தாமிருந்தார் கோடியாமே

விளக்கவுரை :


3330. கோடியாந் தவகோடி ரிஷிகள்கோடி குவலயத்தில் சத்துவகை யறியாமற்றான்
கோடியே சுட்டலைந்து கெட்டார்கோடி தெரிசனங்கள் காணாமல் மாண்டார்கோடி
வாடியே மனந்தளர்ந்து வழிகாணாமல் வகைகெட்டு நூல்பார்த்து மறந்தார்கோடி
கூடியே யொருவரிடம் முறைகள்கேட்டு கூர்மையுடன் பாராமல் கெட்டார்தாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar