போகர் சப்தகாண்டம் 3331 - 3335 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 3331 - 3335 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3331. தாமான யின்னமொரு கருமானங்கேள் தகமையுள்ள சித்தர்முனி கொங்கணவரப்பா
சாமான்யமானதொரு சாத்திரத்தை சதுரான சங்கமதிற் கொண்டுசென்று 
பூமான்கள் சித்துவகை இருக்குங்கூட்டம் புகழ்ச்சியுடன் வழிபாடு சென்றுமங்கே
சாமான்ய மானதொரு கொங்கணவர்தாமும் மதிப்புடனே சபைநடுவே சென்றிட்டாரே

விளக்கவுரை :


3332. சென்றிட்ட கொங்கணவர் சித்தர்தாமும் சிறப்புடனே சித்தர்முனிதம்மைக்கண்டு
வென்றிட்ட சாத்திரத்தை வாதுபேசி விருப்பமுடன் சத்துவகை மிகவும்பேசி
கன்றிட்ட கருங்குருவைத் தெரிந்துகொண்டு கருத்துடனே கருமுடிக்க மனதிலெண்ணி
பன்றிட்ட சாத்திரத்தை தோஷஞ்சொல்ல பாரினிலே சத்துவகை முடித்தார்காணே

விளக்கவுரை :

[ads-post]

3333. காணவே பத்துவகை யெடுக்குமார்க்கம் நடந்ததோர் ஞானிமுதல் சித்தர்தாமும்
தோணவே பாஷாணம் முப்பத்திரண்டும் துறையோடும் முறையோடும் செப்பக்கேளு
பூணவே வகைவகைக்கு பலமதாக புகழுடனே தேனுதனில் நாலுசாமம்
வேணவே தானரைப்பாய் மைந்தாகேளு விருப்பமுடன் வெண்ணெயது போலேயாட்டே

விளக்கவுரை :


3334. ஆட்டியே ரவிதனிலே காயவைத்து அப்பனே மூசைதனிலடைத்து மைந்தா
பூட்டியே வாலுகையா மேந்திரத்தில் புகழாக தானரைப்பாய் மைபோலாக
நாட்டியே மூசைதனிலடைத்துமைந்தா நலம்பெறவே சில்லிட்டுச் சீலைசெய்து
நீட்டமுடன் சரவுலையில் வைத்துவூது சேறான சரக்கெல்லாம் புகைந்துபோமே

விளக்கவுரை :


3335. போகுமே சரக்கெல்லாஞ் சத்தேயாகி பொங்கமுடன் ஈயமதுபோலேயாகும்
சாகுமே பாஷாணம் புகைந்துமல்லோ சத்துபோல் சத்தாகி களங்குமாகி 
வேகுமே சரவுலையில் புகையுண்டாகி வேகமுடன் அஞ்சனத்தின் கல்போலாகும்
பாகுடனே உருக்கியதோர் மூசைதன்னை பதமுடனே தானெடுத்து வுடைத்துப்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar