5691. ஓடென்ற வுச்சாடங் கூறும்போது
வுத்தமனே யதர்வணமும் நீங்கியல்லோ
நீடென்று வஸ்துசுத்தி
பானஞ்செய்து நிலையுடனே பாலமிர்தம் வாயிலிட்டு
கூடென்று வசிமூலி
வாயிற்கொண்டு கொற்றவனே செவிதனிலே யூதும்போது
மேடென்று வையகத்தில்
கண்திறந்து மேதினியில் உயிரதுவும் வருகும்பாரே
விளக்கவுரை :
5692. பாரேதான் சித்துமுனி
ரிஷிகள்தாமும் பாருலகில் அதர்வணத்தை மறைத்துவைத்தார்
ஆரோதான் சொன்னவர்கள்
ஆருமில்லை வப்பனே யாமுமக்கு சொன்னோம்பாரு
நேரேதான்
காலாங்கிநாதர்தாமும் நேர்மையுடன் எந்தனுக்கு உரைத்தநீதி
பேரேதான் சொல்வதற்கு
யாருமில்லை பேரான போகரிஷி யுரைத்தேன்பாரே
விளக்கவுரை :
[ads-post]
5693. உரைத்தேனே ஏழாயிர
சத்தகாண்டம் வுற்பனமும் விற்பனமும் மெத்தவுண்டு
நிரைத்தேனே யாறாவது
காண்டத்துள்ளே நேர்மையுடன் அதர்வணத்தைக் கூறினேன்யான்
விரைத்ததொரு பொருளெல்லாம்
இதிலடக்கம் விருப்பமுடன் பாடிவைத்த சத்தகாண்டம்
குரைத்த தொருபொருளெல்லாம்
எந்தனாயர் குருமுனியாம் அகஸ்தியத்தில் காணலாமே
விளக்கவுரை :
5694. காணலாம் அகத்தியனார்
காவியத்தில் கருவான பன்னீராயிரத்திலப்பா
பூணலாம் பனிரெண்டு
காண்டத்துள்ளே புகட்டினார் கோடிவகைக் களஞ்சியங்கள்
தோணவே யண்டசராசரங்களெல்லாம்
துறட்டியென்ற குடலதுபோல் கூறினார்கள்
வேணபடி குருநூலாம்
பன்னீராயிரம் விருப்பமுடன் பாடிவைத்தார் முனிவர்தாமே
விளக்கவுரை :
5695. முனியான என்பாட்டன்
அகஸ்தியர்தாமும் முனையான காலாங்கி நாதர்தாமும்
சொனைபோலே சாத்திரங்கள்
எனக்குரைத்தார் தோற்றமுடன் பிரகாசமானசித்து
மனைதோறும்
சாத்திரவேதாகமங்கள் மார்க்கமுடன் பாடிவைத்தார் பலநூல்சித்தர்
வினையாலே மாண்டதொரு மாண்பருக்கு
விரிவான அதர்வணங்கள் சொல்லார்காணே
விளக்கவுரை :

