5696. கானான புலிப்பாணி மைந்தாகேளு
தகைமையுள்ள காலாங்கிசொன்னநீதி
கோனான பதினென்பேர்
சித்தர்தாமும் கொற்றவனே நவகோடி சித்தர்தாமும்
பானான நாற்பத்தெண்பேர்களப்பா
பலபலவாஞ் சாத்திரங்கள் பாடிவைத்தார்
மானான தலைமுறைகள்
சாதிவர்க்கம் மன்னவனே சாத்திரத்திற் சொல்லாரன்றே
விளக்கவுரை :
5697. சொல்லவில்லை சிலபேர்கள் சொன்னாரப்பா சுந்தரனே சிலபேர்கள் மறைத்துவைத்தார்
வெல்லவே காலாங்கிநாதர்தாமும்
வேகமுடன் குளிகையது கொண்டுமல்லோ
கல்லான மலைகளிலும்
குகைகள்தன்னில் கண்டுமே ஆராய்ந்து சித்துதம்மை
புல்லவே சாதிபேதங்கள் ரெண்டு
புகழான சாத்திரத்தில் வசனித்தாரே
விளக்கவுரை :
[ads-post]
5698. வசனித்தார் எந்தமக்கு
காலாங்கிநாதர் வளமுடனே சொன்னதொரு சாதிமார்க்கம்
நிசமுடனே யானுரைப்பேன்
நீதிவானே நிஷ்களங்கமானதொரு பேதஞ்சொல்வேன்
தசமான காலாங்கி நாதர்தாமும்
தாக்கான மயன்சாதி யென்னலாகும்
கசடன்று தலைமுறைகள்
பத்தேயாகும் காசினியில் கண்டவரை யுரைத்திட்டோமே
விளக்கவுரை :
5699. உரைத்தோமே எந்தனிட
சாதிமார்க்கம் வுத்தமனே விஸ்வகர்மமென்னலாகும்
நிரைத்ததொரு ரோமரிஷி
சாதிபேதம் நிலையான வலைவீசுஞ்சாதியப்பா
திரைத்ததொரு எந்தனது
தலைமுறைதானப்பா திரளான பதினெட்டு தலைமுறையாகும்
வரைத்ததொரு ரோமரிஷி
தலைமுறைதானப்பா வாகான பனிரெண்டு தலைமுறைதானாமே
விளக்கவுரை :
5700. தலைமுறையாம் மச்சமுனி
சாதிபேதம் தண்மையுள்ள கல்லுடையோர் என்னலாகும்
கலையான கோத்திரங்கள்
அறுபத்திரண்டு காசினியில் கண்டவரைச் சொல்லலாச்சு
மலையான சட்டமுனி சாதிபேதம்
மகத்தான சிங்களவன் என்னலாகும்
சிலையான கோத்திரங்கள்
பதினாலாகும் சிற்பரனே கண்டநூல் அறிந்தமட்டே
விளக்கவுரை :

