5716. ஜாதியா மின்னமொரு
மார்க்கங்கேளு தயவான புலிப்பாணி மைந்தாபாரு
ஆதியாம் தட்சணாமூர்த்தியப்பா
வப்பனே யவர்மரபு யாதென்றாக்கால்
நீதியாங் கவுண்டனென்ற
மரபேயாகும் நிஷ்களங்கமான தொருமூர்த்தியென்பார்
சோதிடமாம் பலநூல்கள்
ஆராய்ந்தேதான் சொன்னதொரு மொழியதுவும் மெய்யதாமே
விளக்கவுரை :
5717. மெய்யான தலைமுறைகள் பதிமூன்றாகும் மிக்கான சாத்திரத்தில் உரைத்தவாறு
துய்யவே கோரக்கர்
மரபேதென்றால் துப்புரவாய் மாராட்டியனார் என்னலாகும்
பையவே தலைமுறைகள்
பதினொன்றாகும் பாங்கான சாத்திரத்திற் சொன்னவாறு
வெய்யவே வேதமுனி
சித்துதாமும் வெகுநூல்கள் ஆராய்ந்து பார்த்தார்தானே
விளக்கவுரை :
[ads-post]
5718. தானான இன்னமொரு
மார்க்கங்கேளு தயவான புலிப்பாணி கண்ணேயப்பா
கோனான கௌபாலராணிக்கோர்வை
கொற்றவனே பாடிவைத்தா ருண்மையாக
மானான வவர்மரபு
யாதென்றாக்கால் பாங்கான பப்பரவர் மரபேயாகும்
மானான தலைமுறைகளெட்டேயாகும்
மகத்தான பெருநூலில் சொன்னார்பாரே
விளக்கவுரை :
5719. சொன்னாரே ஜோதிமா முனிவரப்பா
துப்புரவாய் ஆணியென்ற கோர்வைசெய்தார்
தென்னான தட்சணாபதியிலப்பா
தேற்றமுடன் மலைதனிலே யிருக்குஞ்சித்து
பன்னவே மரபதுவும்
ஏதென்றாக்கால் பாங்கான பள்ளனென்றே செப்பலாகும்
உன்னிதமாய் தலைமுறைகள்
ஆறேயாகும் வுற்பனமாய் ஓதிவைத்தார் நூலில்தாமே
விளக்கவுரை :
5720. நூலான நூல்தனிலே
சொன்னமார்க்கம் நுணுக்கமுடன் வெகுகோடி சொன்னாரப்பா
பாலாநடமரகர் மரபேதென்றால்
பாங்கான மரவரென்றே செப்பலாகும்
தாலான தலைமுறைகள் நாலேயாகும்
தாக்கான வவர்நூலில் சொன்னவாறு
பாலான மொழிபோலே
முனிவர்தாமும் பாடிவைத்தார் பட்சமுடன் பாரில்தானே
விளக்கவுரை :

