5731. வந்ததொரு சித்துக்கு
முறைமைசொல்வேன் வளமுடனே சோடசமாமொன்றுமூன்று
சிந்தனையாய் யவர்நூலில்
கண்டாராய்ந்து சீருடனே யானுரைத்தேன் முறைதப்பாது
சுந்தரனே காலகண்டர்
முனிவர்தாமும் சுத்தமுடன் யவர்மரபு யேதென்றாக்கால்
தந்திரமாங் கள்ளருட
ஜாதியாகும் தாரணியில் அவர்நூலிற் கண்டவாறே
விளக்கவுரை :
5732. வாறான தலைமுறைகள் ஒன்றுபத்து
வளமையுடன் அவர்நூலில் சொல்லலாகும்
நூறாண்டு வெகுகால
மிருந்தசித்து நுட்பமுடன் சீஷவர்க்கங் கொண்டசித்து
காறான யின்னமொரு
மார்க்கங்கேளு கருவான புலிப்பாணி மைந்தாபாரு
ஆறான சுப்பிரமணியர்
மரபேதென்றால் வப்பனே சைவமென்ற பீடமாமே
விளக்கவுரை :
[ads-post]
5733. பீடமாந் தலைமுறைகள் ஏதென்றாக்கால் பேரான நூற்றிரண்டு பத்துமூன்று
கீடாதி நூல்களிலே கண்டவாறு
கிருபையுடன் நானறிந்தமட்டுஞ் சொன்னேன்
நீடான யூகிமுனி மரபேதென்றால்
நிசமான குரும்பருட ஜாதியாகும்
தாடான தலைமுறைகள்
என்னசொல்வேன் தாக்கான பதினெட்டு ஒன்று மூன்றே
விளக்கவுரை :
5734. ஒன்றான சாதியப்பா
இன்னஞ்சொல்வேன் வுத்தமனே புலிப்பாணி வுகந்துகேளு
நன்றான ஜெமதக்னி ஜாதிபேதம்
நலமான சைவமென்ற ஜாதியாகும்
குன்றான மலையேறி கிரணந்தன்னை
கிருபையுடன் கண்டல்லோ சாதமுண்போர்
வென்றிடவே தலைமுறைகள்
நான்குபத்து வேகமுடன் வந்நூலில் கண்டோம்பாரே
விளக்கவுரை :
5735. பாரேதான் இன்னமொரு மார்க்கங்கேளு
பாங்கான திரணாக்கிய முனிவர்தானும்
தேரேதான் சைனகருட ஜாதியாகும்
தேரான பிரபுலிங்க லீலைநூலார்
நேரேதான் அவர்நூலில்
ஜாதிபேதம் நேர்மையுடன் கண்டறிந்த ஜாதிமார்க்கம்
வேரேதான் தலைமுறைகள்
ஈரெட்டொன்று வித்தகனே நூல்தனிலே கண்டோம்பாரே
விளக்கவுரை :

