5736. பாரேதான் சண்டேசர்
ஜாதிமார்க்கம் பாங்கான வள்ளுவனார் என்றேயாகும்
நேரேதான் தலைமுறைகள்
ஒன்றுபத்து நேர்மையுடன் அவர்நூலில் சொன்னநீதி
சீரேதான் சித்தர்முனி
ரிஷிகள்தேவர் சிறப்புடனே பாடிவைத்த நூலைக்கண்டு
பேரேதான் வேர்பிரித்து
பகுத்துயானும் பேரின்ப நிலைநின்று பாடினேனே
விளக்கவுரை :
5737. பாடினேன் இன்னமொரு
மார்க்கங்கேளு பாலகனே புலிப்பாணி மைந்தாபாரு
நாடியே திருமூல
வர்க்கத்தார்கள் நலமான ஜாதியது மரபேதென்றாக்கால்
தேடியே வேளாள ஜாதியாகும்
திருக்கூட்ட மெத்தவுண்டு சொல்லொண்ணாது
ஆடியதோர் தலைமுறைகள்
ஏதென்றாக்கால் வப்பனே ரெண்டுபத்து வொன்றுதானே
விளக்கவுரை :
[ads-post]
5738. ஒன்றான சாத்திரத்தின்
உளவாராய்ந்து வுத்தமனே பலநூலுங் கண்டுதேர்ந்து
சென்றுமே ரிஷிமுனிவர்
கூறுநூலும் சிறப்பான சாத்திரத்தின் தொகுப்பைக்கண்டு
வென்றிடவே காலாங்கி
தாள்பணிந்து வேகமுடன் குளிகையது பூண்டுகொண்டு
குன்றான மலைகுகைகள்
யானுங்கண்டு கொற்றவனே காவியந்தான் கூறினேனே
விளக்கவுரை :
5739. கூறினேன் காவியந்தான்
ஏழாயிரமாகும் கூறான சத்தகாண்டம்போலநூல்கள்
மீறியதோர் நூலுண்டோ
வையகத்தில் மிக்கான நூலிதுபோல் ஆர்தான்சொன்னார்
மாறுபாடாகவல்லோ
சாத்திரநூல்கள் மகத்தான சித்துமுனி சொன்னாரப்பா
ஆறுதலம் போலாக யிந்தநூல்தான்
வப்பனே யுந்தனுக்கு வரைந்திட்டேனே
விளக்கவுரை :
5740. அறைந்ததொரு யின்னமொரு
மார்க்கங்கேளு வப்பனே புலிப்பாணி மைந்தாபாரு
நிறைந்ததொரு சித்தர்முனி
ரிஷிகளானோர் நீடாழி யுலகுதனி இருந்தவாறும்
குறைந்ததொரு வவரவர்கள்
வயதுமார்க்கம் கூறுகிறேன் வையகத்தில் கண்டாராய்ந்து
மறைந்ததொரு சமாதியின்தன்
மார்க்கமெல்லாம் மன்னவனே யுந்தனுக்கு நிகழ்த்துவேனே
விளக்கவுரை :

