5741. நிகழ்த்துவேன் காலாங்கி நாதர்தம்மை நெடுங்கால செய்தியெலாம் நிகழ்த்துவேன்யான்
புகழான காலாங்கி நாதர்தாமும்
விண்ணியனார் வெகுகால மிருந்தசித்து
அகந்தனிலே மூன்றுயுகஞ்
சமாதிசென்று வப்பனே முயற்சியுடன் வந்தசித்து
ஜெகந்தனிலே சீனபதி
தேசந்தன்னில் சிறப்புடனே குளிகைகொண்டு போனசித்தே
விளக்கவுரை :
5742. சித்தான காலாங்கி
நாதர்தானும் சிறப்புடனே சீனபதி தன்னிற்சென்று
முத்தான காலனது
வருளும்பெற்று முனையான சமாதிதனில் இறங்கியல்லோ
சத்தமுடன் அசரீரி
வாக்கினோடும் தாரணியில் சமாதிமுகம் இருந்துகொண்டு
பத்தியுடன்
சீனபதிமாண்பருக்கு பலகாலுந் தரிசனைகள் புரிகுவாரே
விளக்கவுரை :
[ads-post]
5743. புரிகுவார் வயதினுட
மார்க்கந்தன்னை புகலுவேன் காலாங்கி நாதருக்கு
சரியுடனே மூவாயிரஞ்
சொச்சமப்பா சங்கமுடன் வயதுதான் என்னலாகும்
குறியான வருடமது
மூவாயிரந்தான் குறிப்புடனே மகாநூலிற் சொன்னநீதி
நெறியுடனே
வையகத்திலிருந்துமல்லோ நேர்மையுடன் சமாதிமுகம் சென்றார்தானே
விளக்கவுரை :
5744. தானான போகரிஷி மார்க்கஞ்
சொல்வேன் தயவான புலிப்பாணி மைந்தாகேளு
கோனான யெனதையர் காலாங்கிநாதர்
குறிப்புடனே எந்தனுக்குச் சொன்னநீதி
பானான வயததுவும்
முந்நூரென்று பான்மையுடன் எந்தனுக்கு உபதேசித்தார்
தேனான குளிகையது
பூண்டுகொண்டு தேசமெலாஞ் சுற்றிவந்தேன் காலந்தானே
விளக்கவுரை :
5745. காலமாம் வெகுகால
மடியேன்தானும் காலாங்கி நாதருட கிருபையாலும்
கோலமுடன் திருக்கமலம்
வீற்றிருக்கும் கொம்பனையாள் மனோன்மணியாள் கிருபையாலே
ஆலகால முடையதொரு
வரன்பாகத்தில் வப்பனே வையகத்தில் யானுமல்லோ
தாலமெலாஞ் சுத்திவந்து
யடியேன்தானும் தாரணியில் சித்துமுனி ரிஷிகண்டேனே
விளக்கவுரை :

