5746. கண்டேனே வெகுகோடி
சித்துதம்மை காலாங்கி நாதருட கிருபையாலே
கொண்டதொரு வையகத்து
வதிசயங்கள் கொற்றவனே யடியேனுந்தானறிந்து
உண்டான வுளவுபதி
மார்க்கமெல்லாம் வுத்தமனே கண்டல்லோ மிகவாராய்ந்து
பண்டிதங்கள் மிகப்பார்த்து
பலநூல்சேதி பாங்குடனே சீனபதிக் குறைத்திட்டேனே
விளக்கவுரை :
5747. உரைத்தேனே சீனபதி
மாண்பருக்கு வுத்தமனே லோகவதிசயங்களெல்லாம்
வுரைத்தேனே சீனபதிப்
பெண்களுக்கு வகுப்பான சித்துமுனி ரிஷிகள் மார்க்கம்
திரைகடல்சூழ் அஷ்டாங்க
யோகமெல்லாம் திரட்டினேன் போகரேழாயிரந்தான்
புரையொன்றும் நேராமல்
புகழ்ந்தநூலாய் புகட்டினேன் சீனபதிமாண்பருக்கே
விளக்கவுரை :
[ads-post]
5748. மாண்பான புலிப்பாணி
மைந்தாகேளு மகத்தான வையகத்தில் முந்நூறாண்டு
ஆண்மையுடன் நானிருந்தேன்
அதிசயங்கள் வப்பனே யான்கண்டவாறுமட்டும்
வீண்போகாக் காலமது
சாத்திரத்தின் வீரானவுளவு நிதானங்கள்கண்டு
தாண்மையுடன் யானுரைப்பேன்
இதிகாசங்கள் சட்டமுடன் சொல்லுகிறேன் பண்பாய்க்கேளே
விளக்கவுரை :
5749. கேளேதான் ரோமரிஷி வயதுமார்க்கம் கெவனமுடன் சொல்லுகிறேன் பண்பாய்க்கேளு
நாளேதான் போகாமல்
ரோமர்தாமும் நலமுடனே சமாதிமுகஞ் சென்றுமல்லோ
ஆளேதான் வருஷமது வையகத்தில்
வப்பனே தானிருந்து வெளியுமாகி
பாளேதான் போகாமல்
வருஷமறுநூறு பாங்குடனே வீற்றிருந்த சித்துமாமே
விளக்கவுரை :
5750. சித்தான மச்சமுனி
வாறேதென்றால் சிறப்பான வையகத்தி லிருந்தசேதி
பக்தியுடன் முந்நூறு
வாண்டுமட்டும் பகவானைத்துதிசெய்து காயங்கொண்டு
முத்தியுடன் சமாதிக்குச்
சென்றுமல்லோ மூர்க்கமுடன் மூவாண்டு சமாதிபூண்டு
கத்தனையே தானினைத்து
கைலைதன்னில் காசினியை விட்டுமல்லோ யேகினாரே
விளக்கவுரை :

