5766. சென்றாரே புஜண்டரெனும்
சித்துதாமும் சிறப்புடனே சமாதிமுகஞ் சென்றபோது
குன்றான மலைமீதிற் கூடிருந்த
குறிப்பான மானதுவும் மனதுவந்து
வென்றிடவே ரிஷியாரின்
சித்துபாதம் வெகுநாளாய் தான்வளர்த்த சாபத்தாலே
அன்றுமே கூடிருந்த
மான்தானப்பா வப்பனே சமாதிமுகஞ் செல்லலாச்சே
விளக்கவுரை :
5767. ஆச்சப்பா சமாதிமுகஞ்
சென்றபோது வப்பனே சீஷவர்க்க மாண்பர்தானும்
மூச்சடங்கிப்போனதொரு
புஜண்டரப்பா முனையான வையகத்தில் வருவதில்லை
பாச்சலுடன் சமாதிமுகம்
மூடியல்லோ பண்பான பாறைகொண்டு யேகியல்லோ
வீச்சலுடன் மாண்பரெல்லாம்
வெளியேகிவிட்டாரே கோடிதளங்காணலாச்சே
விளக்கவுரை :
[ads-post]
5768. காணவே யின்னமொரு
கருமானங்கேள் காசினியில் கருவூரார் என்றசித்து
தோணவே நடேசரென்னும்
கருவுண்டாகி துப்புரவாய் பாண்டியனுக் கருளுந்தந்தார்
பூணவே பாண்டியன்
தேவாலயத்தில் பொங்கமுடன் நடேசரைத்தான் செய்துவைத்தேன்
தோணவே காயாதி கற்பங்கொண்டு
தொல்லுலகில் வெகுகால மிருந்தசித்தே
விளக்கவுரை :
5769. சித்தான கருவூரார்
என்றசித்து சின்மயத்தில் பேரின்பங்கொண்டசித்து
முத்தான வயததுவும்
முந்நூராண்டு மூதுலகில் பாண்டியனுக்குகந்தசித்து
பத்தியுடன் சிதம்பரமாம்
தேவஸ்தானம் பட்சமுடன் நிர்மித்த ஞானசித்து
சத்தியெனும் மடாலயங்கள்
உண்டுபண்ணி சாங்கமுடன் சமாதிமுகஞ் சென்றசித்தே
விளக்கவுரை :
5770. சென்றதொரு சித்துமுனி
மார்க்கங்கேளு செயலான புண்ணாக்கு ஈசரப்பா
தென்றிடவே வயததுதான்
நூற்றிரண்டுபத்து விருப்பமுடன் மரப்பொந்தில் இருந்தசித்து
குன்றுமலை
குளிகையதுயனியாச்சித்து கோபாலா கோபாலா வென்னுஞ்சித்து
தென்றிசையில் வடகோடி
கானகத்தில் திருவாத்தின் மரத்தின்மேலிருந்தசித்தே
விளக்கவுரை :

