5776. இட்டதொரு புண்ணாக்கு
மீசர்தாமும் எழிலான திருவாத்தின் மரத்தின்கீழே
சட்டமுடன் திருப்பொந்தி
லிருந்துகொண்டு சாங்கமுடன் சிவயோகஞ் செய்துமல்லோ
திட்டமுடன் சிலநாட்கள்
கழிந்தபின்பு தீர்க்கமுடன் மரப்பொந்தில் அயிக்கியமாகி
பட்டமரந் துளுத்தல்லோ
வையகத்தில் பட்சமுடன் மாண்பருக்கு குருவுமாச்சே
விளக்கவுரை :
5777. குருவான திருவாத்தி
மரத்தையப்பா கொற்றவனே வையகத்து மாண்பரெல்லாம்
திருவான ரோகமது கண்டபோது
தீர்க்கமுடன் மரத்துக்குக் காப்புகட்டி
சருவான சருகுவகை கியாழமிட்டு
சட்டமுடன் தானருந்தி ரோகந்தீர்ந்து
பெருமையுடன் வையகத்தில்
புனிதவானாய் பேருண்டாய் வெகுநாளாய் வாழ்ந்தார்தாமே
விளக்கவுரை :
[ads-post]
5778. வாழ்ந்தாரே யின்னமொரு
மார்க்கங்கேளு வகுப்பான புலிப்பாணி மைந்தாபாரு
ஆழ்ந்தவே காலாங்கி
கடாட்சத்தாலே வப்பனே வேங்கைதனி லேறிக்கொண்டு
தாழ்ந்திடவே ஜலந்திரட்டி
புனிதவானும் சாங்கமுடன் தாரிணியில் சுற்றிவந்தோன்
மூழ்ந்திடவே வெகுகோடி
காலமப்பா மூதுலகில் இழிந்ததொரு சித்துபாரே
விளக்கவுரை :
5779. பாரப்பா புலிப்பாணி பாலனான
பட்சமுடன் உந்தனுக்கு வயதுசொல்வேன்
ஆரப்பா வயததுவும்
அறுநூறாண்டு வப்பனே வையகத்திலிருந்தசித்து
நேரப்பா சமாதிமுகஞ்
சென்றதில்லை நேர்மையுடன் நெடுங்கால மிருந்தசித்து
சீரப்பா சிவயோகந்
தன்னிற்சென்று சிறப்புடனே சின்மயத்தி லிருந்தசித்தே
விளக்கவுரை :
5780. இருந்துமே வெகுகாலமானசித்து
எழிலாக எந்தனிட வுபதேசங்கள்
பொருந்தவே தானடைந்து
புனிதனாவாய் பொங்கமுடன் வையகத்தி லிருந்தசித்து
திருந்தவே மலைகுகைகள்
வனாந்திரங்கள் தீரமுடன் கண்டறிந்த சித்துவாகும்
கருந்தமிழும் செந்தமிழும்
கலந்தசித்து காசினியில் உபவாசச் சித்துமாமே
விளக்கவுரை :