போகர் சப்தகாண்டம் 5801 - 5805 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 5801 - 5805 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5801. என்றவுடன் யாக்கோபு தாள்பணிந்து எழிலான வார்த்தையது கூறும்போது
சென்றுமே யாக்கோபு தன்னைக்கண்டு சிறப்புடனே சுன்னத்து செய்துமல்லோ
தின்றிடவே ரொட்டியது தானுமீய்ந்து சிறப்புடனே யசேனுசேன் என்றுகூறி
வென்றிடவே யுபதேச பிரணவத்தை விருப்பமுடன் மலுங்குமார் ஓதினாரே

விளக்கவுரை :


5802. ஓதவே நபிநாயர் கூட்டத்தார்கள் வுத்தமர்கள் மனம்போலே மனதுவந்து
நீதமுடன் மக்கபுரி கோட்டைக்குள்ளே நிஷ்களங்க பக்கிரியாக்கோபு தன்னை
தோதமுடன் கொண்டுசென்றார் அரண்மணைக்குள் தோறாமல் கொத்துமா யோதினார்கள்
வீதமது பயனறிந்த சித்துதாமும் விடுபட்டு வந்ததொரு யாக்கோபாச்சே

விளக்கவுரை :

[ads-post]

5803. ஆச்சப்பா யின்னமொரு வயனம்சொல்வேன் வப்பனே கொங்கணவர் வயதுமார்க்கம்
பாச்சலுடன் எண்ணூறு வாண்டுமட்டும் பாரினிலே இருந்ததொரு சித்துமாகும்
மாச்சலுடன் சமாதிமுகஞ் சென்றசித்து மகத்தான கொங்கணவர் சித்துமாகும்
ஓச்சலது இல்லாமல் வுலகுதன்னில் வுத்தமனே வெகுகாலம் வுழன்றசித்தே

விளக்கவுரை :


5804. சித்தான சித்துமுனி ரிஷிகள் தாமும் சிறப்பான கொங்கணவர் காண்டஞ்சொல்லி
முத்தான கடைக்காண்டம் மூன்றுஞ்சொல்லி மூதுலகில் சமாதிக்கு ஏகலானார்
பத்தியுடன் கடைக்காண்டம் நூலிலப்பா பாடிவைத்தார் வெகுசங்கைக் காணப்போமோ
புத்தியுள்ள மாண்பர்களும் காண்பாரப்பா கண்டாலும் மதிசங்கை யின்னமுண்டே

விளக்கவுரை :


5805. உண்டான கடைக்காண்டம் பாடியல்லோ வுத்தமனுங் கொங்கணவர் முனிவர்தானும்
நண்பான வையத்தில் மாண்பர்முன்னே நலமான ரிஷிமுனிவர் தனையழைத்து
வண்பான சாத்திரங்கள் பாடியல்லோ வளமுடனே வெகுசித்தர் மறைத்துவைத்தார்
திண்ணமுடன் காயாதி கற்பங்கொண்டு தீரமுடன் சமாதிக்குச் சொல்வேன்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar