போகர் சப்தகாண்டம் 5806 - 5810 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 5806 - 5810 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5806. சொல்லவே சமாதிமுகம் நின்றபோது செம்மலுடன் சீஷவர்க்கம் அனேகங்கோடி
மெல்லவே சமாதிக்கு இடமுந்தேடி மேன்மையுடன் வழிபாடு செய்துமல்லோ
புல்லவே கொங்கணனார் முனிவர்தானும் புகழான சமாதிமுகம் வுள்ளேசென்று
வல்லமையாய் முப்பது வாண்டுதானும் வளமுடனே இருந்த சித்துதானே

விளக்கவுரை :


5807. தானான யின்னமொரு வயனஞ்சொல்வேன் தாக்கான கண்மணியே புகலக்கேளு
கோனான தட்சணா மூர்த்தியப்பா குவலயத்தில் வெகுகால மிருந்தசித்து
மானான வயததுவும் ஏதென்றாக்கால் மகத்தான வாயிரத்து சொச்சமப்பா
பானான படியேழு கடலுஞ்சுத்தி பாரினிலே வுழன்றதொரு சித்துகாணே

விளக்கவுரை :

[ads-post]

5808. காணவே தட்சணாமூர்த்தியாகும் காசினியில் திருமந்திரம் பாடினோர்தான்
பூணவே சிவாலயந் தன்னிலப்பா பொங்கமுடன் வெகுகால மிருந்தசித்து
தோணவே திருமந்திரம் பாடியல்லோ தோற்றமுடன் சமாதிக்கு யேகவெண்ணி
ஆணவங்கள் தானொடுங்கி சித்துதாமும் வண்பான காசிபதி சென்றிட்டாரே

விளக்கவுரை :


5809. சென்றாரே நற்மதா நதியின்பக்கல் சிறப்புடனே தட்சணாமூர்த்திநாயர்
குன்றான கரையோரம் மண்டபந்தான் கொற்றவனார் சமாதிமுகஞ் சென்றுமல்லோ
வென்றிடவே ஒருயுகமாம் அறுபதாண்டு வுத்தமனார் தானிருந்துவந்தசித்து
தென்றிசையில் தட்சணாமூர்த்தி யென்று தேசமதில் பேர்கொண்ட சித்துபாரே

விளக்கவுரை :


5810. பாரேதான் இன்னமொரு மார்க்கஞ் சொல்வேன் பாங்கான பாலகனே பகரக்கேளு
நீரேதான் கோரக்கர் வயதேதென்றாக்கால் நிஷ்களங்கமாகவல்லோ மாயாசித்து
சேரேதான் வயததுவும் எண்பதாகும் செப்பினார் அவர்நூலில் சூத்திரந்தான்
சீரேதான் பதினாறு சூத்திரத்தில் சிறப்பாகப் பாடிவைத்த துண்மையாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar