5811. உண்மையாங் குளிகையது
தானுமில்லை வுத்தமனே நரைதிரையும் யாதொன்றில்லை
வண்மையாம் பிணியென்ற
ரோகமில்லை வகுப்பான காயாதிதானுமில்லை
தண்மையுடன் வையகத்து
மாண்பரெல்லாம் தப்பாமல் சிவயோகி என்பார்பாரு
திண்மையுடன் கோரக்கர்
மூலிதம்மை தீர்க்கமுடன் எப்போதும் தின்பார்தானே
விளக்கவுரை :
5812. திண்பாரே கோரக்கர் மூலியாலே
தீர்க்கமுடன் கோரக்கர் சித்துமாச்சு
வன்பாக சமுசார
வாழ்க்கையில்லை வளமான பொருளின்மேல் ஆசையில்லை
என்னேரந் திரிகால பூசையோடும்
எழிலான காவிகஷாயத்தோடும்
சொன்னபடி மனோன்மணியாள்
பிரணவத்தை தொல்லுலகில் யெப்போதும் சொல்வார்தானே
விளக்கவுரை :
[ads-post]
5813. சொல்வாரே யின்னமொரு
மார்க்கங்கேளு தூய்தான நற்பாலா தீரவானே
புல்லவே கௌபால சித்துதானும்
புகழான வையகத்தில் இருந்தசித்து
வல்லதொரு பொன்னுக்கு
வாணிமாற்று வகுப்புடனே கண்டறிந்த ஞானசித்து
சல்லியமாம் வித்தைதனில்
தேர்ந்தசித்து சட்டமுடன் வுரைகல்லுக்குரியசித்தே
விளக்கவுரை :
5814. உரையான பொன்னுரைக்கும்
கல்லைத்தானும் வுத்தமனே மலைதனிலே கண்டுதேடி
திரையோடும் புரையகற்றி
வயிரக்கல்லை திட்டமுடன் ஆராய்ந்த ஞானசித்து
வரையான சித்துக்கு
வயதேதென்றால் வளமுடனே கூறுகிறேன் இன்னங்கேளு
கரைகண்ட சித்தல்லோ
கெவனசித்து கௌபால சித்தென்று பேருண்டாச்சே
விளக்கவுரை :
5815. பேரான சித்துக்கு
வயதேதென்றால் பெருமையுடன் கூறுகிறேன் கொற்றவர்கேள்
நேரான வயததுவும்
இருநாற்றைந்து நெடிதான காடுமலை திரிந்தசித்து
ஊரோடுங்கூடியல்லோ உறவுபேசி
வுகமையுடன் சாத்திரத்தை யறிந்தசித்து
சீரான கௌபால சித்தருக்கு
சிறப்புடனே ஞானமென்ற தேசந்தானே
விளக்கவுரை :