5816. தேசமாம் உபதேசம்
பெற்றுக்கொண்டு தேற்றமுடன் காயாதி கற்பங்கொண்டு
வாசமது மலையனிலே
இருந்துகொண்டு வகுப்பான சித்தரது வுளவாராய்ந்து
நேசமுடன் சமாதிக்கு ஏகவெண்ணி
நெடுங்காலஞ் சீஷவர்க்க மாண்பரோடும்
பாசமொடு தனக்குகந்த
சீஷனைத்தான் பட்சமுடன் கண்டறிந்து வுரைத்தார்தாமே
விளக்கவுரை :
5817. உரைத்தாரே சீஷவர்க்க சேதிதன்னை வுத்தமனே சமாதிக்குப் போரேனப்பா
வரையான சமாதிமுகஞ் சென்றபோது
வளமுடனே எந்தனுக்கு வயிரக்கல்லால்
குறையாமல் சமாதிதனை
மூடியல்லோ கொற்றவனே கருவயிரக்கல்லில்தானும்
மறைவாகக் கைநாட்டுச்
சித்திரந்தான் மன்னவனே எழுத்துரையு மென்பார்தானே
விளக்கவுரை :
[ads-post]
5818. என்றவுடன் கௌபாலசித்துதாமும்
எளிதான வயிரக்கல் மேலேயப்பா
வென்றிடவே எழுத்துமுகம்
மாறியல்லோ மேதினியில் எல்லவர்க்கும் அறிவதற்கு
குன்றான கல்லின்மேல்
எழுத்துவூன்றி கொற்றவனே கௌபாலர் சமாதியென்று
நன்றாக வரைதீட்டி
சீஷர்தாமும் நலமுடனே சமாதிமுகஞ் செய்தார்பாரே
விளக்கவுரை :
5819. செய்யவே பதினான்கு
வருஷமட்டும் செப்பரிய சமாதிமுகந்தனிலிருந்து
பையவே வையகத்தில் வந்தசித்து
பாங்குடனே ஏமமென்ற சித்துவாகும்
துய்யதமிழ் பண்டிதர்கள்
போற்றுஞ்சித்து துறையான ஏமமாற்றறிந்தசித்து
வையகத்தில் சித்துமுனி
ரிஷிகள்தேவர் வளமுடனே எவரறிந்தார் ஆணிதானே
விளக்கவுரை :
5820. ஆணியா மின்னமொரு
வதிதஞ்சொல்வேன் வப்பனே புலிப்பாணி மைந்தாகேளு
நீணிலத்தில்
ஜோதிமாமுனிவர்தாமும் நீதியுடன் வெகுகாலமிருந்தசித்து
வாணிபங்கள் செய்வதற்கு
ஏமமாற்றை வளமுடனே கண்டறிந்தசித்துதாமும்
காணிகளும்
பூமிவளமெல்லாங்கண்டு கருவயிரக்கல்லெடுத்த சித்துதானே
விளக்கவுரை :