181. ஆச்சென்ற இருபதுபேர்
காமத்தாலே யனேகநாளிருந்துமே லிருந்துபோனார்
போச்சென்று அவர்பிடித்தார்
பிராணயோகம் பேரானசிவகளை மூர்க்கத்தாலே
பேச்சென்ற வாணவம் பிறந்தால்
பார்மேற் பேறுபெற அவர்போலே யாருக்காகும்
மூச்சென்று முந்திமுந்தி
மூலயோகம் ஒளிவுகண்ட மட்டுமே நெஞ்சிற்பாரே
விளக்கவுரை :
182. பாரென்ற நெஞ்சில்நிற்கும்
நடுமூலந்தான் பரிநேராய் பார்த்துமே பழக்கமாக்கி
பூரென்று வந்ததென்றார்
புசுண்டமூர்த்தி யொருநெருப்பு பஞ்சுபட்டார் போலேயாகும்
போரென்ற பரத்தேறு
போகரையய்யமாம் பின்குஞ்சு சிறகொடிந்து நாலும்போனால்
ஏரென்ற வினத்தோடே கூடாதாய்
போவிளமையிலே மூலத்தைக் கூட்டிடாயே
விளக்கவுரை :
[ads-post]
183. கூடாட்டால் அரிதரிது
பிராணனென்றார் கூறியதோர் சொன்னமொழி கேட்டுப்பொங்கி
ஆடாட்டால் அடியற்ற மரம்போல்
யானுமவர்பதத்தில் வீழ்ந்தெழுந்தேன் ஆண்மையாக
நாடாட்டால் ஐயரன்று
யோகமூர்த்தி நம்போலே வாழ்ந்திரென்று யெடுத்தாரைய்யர்
மூடாட்டால் சொன்னதொரு
மூலமாதி முதிர்ந்துநின்ற பிராணனைத்தான் அறிந்திடாயே
விளக்கவுரை :
184. அறிந்திட்ட ஐயரெங்கே
இருப்பதென்றால் அதிகமாமேருவுக்கு தெற்கேயாகும்
முறிந்திட்ட வாதமுண்டு
ஞானமுண்டு மூர்க்கமாம் யோகமுண்டு சித்தரெல்லாமுண்டு
பிறந்திட்ட பிராணனைத்தான்
அறியப்பண்ணி பூரணந்தான் லயிக்கின்ற யோகங்காட்டி
உருந்திட்ட மாவாசல்
உணர்வுகாட்டி உபதேசத்தண்மைதான் உரைத்திட்டாரே
விளக்கவுரை :
185. உரைத்திட்டு அழித்தலும்
படைத்தலும் செய்தார் உரையான சிவலோக ஆண்மையாலே
வரைத்திட்டு அனுப்பியே
விடைகொடுத்து மாசற்றமூர்த்தியே போய்வாவென்றார்
தரைத்திட்ட ஐயருமே
சாகைக்குப்போனார் சாங்கமாய் பிள்ளைகட்குத் தன்மைசொல்லி
புரைத்திட்டு பிராணனைத்தான்
அறியுங்களென்று போதித்தேன் பிள்ளைகட்கு புத்திதானே
விளக்கவுரை :