146. நாமென்றே போகிறது வருகிறது
ரண்டாம் நலமான ஓரெழுத்து எங்கே என்றால்
கோமென்ற குருபதத்தில்
ஐக்கியமாகி கூடியேமருவிநின்று அரியென்றாகி
வாமென்ற வாசியினால்
சிகாரமாகி வாசியோடொன்றியே சிங்கென்றாச்சு
தேமென்ற ஓரெழுத்தால்
வாசியாச்சு சகனாச்சு சடமாச்சு அண்டமாச்சே
விளக்கவுரை :
147. ஆச்சென்ற ஓரெழுத்தால்
கோபமாச்சு அரகறா உற்பனமும் ஒடுங்கின மூலமாச்சு
ஓச்சென்ற எழுத்தாலே
ஒளியுமாச்சு உள்ளடங்கிச் சோதியைப்போல் நந்திநந்தி
தேச்சென்ற வெழுத்தடங்கில்
ஜோதிகாணும் தேகமுமே விளக்கொளியாஞ் சிந்தையில்லை
நாச்சென்ற சந்திரனுஞ்
சூரியனும் ஒன்றாய் தயங்காதே சுழிமுனையில் பேணிகூடே
விளக்கவுரை :
[ads-post]
148. கூடுவது முப்பாழும் மூன்றுவீதி குறிப்பாக முனையுமணிகூடிச்சேர்க்கும்
நாடவே நாலுக்குளடங்கும்பாரு
நலமாக ஏணிபழுவாகக்காணும்
ஏடவே தளத்தோடு எழுத்துபாரு
ஏறினால் முப்பாழும் கடந்துபோகும்
பாடவே பராபரத்தில்
மனோன்மணித்தாயும் பரிவான அமிர்தமொடு பாலிப்பாளே
விளக்கவுரை :
149. பாலிப்பாலது கடந்தால்
நிராதாரந்தான் பார்த்துமே தெளிந்த பின்பு
பரத்தேயேகில் போலிப்பாள்
தெளிவான போதம்போதம் போக்கோடே என்குருவும் அதற்குள்ளசென்றார்
ஏறிப்பாழிது கடந்தேபோனேன்
இளைப்பாறி யிதுகடந்து அந்தரத்திலேறில்
ஜொலிப்பான சிலம்பொலியில்
புக்கினேன்யான் சுகமெல்லாம் காலாங்கியைப் பார்த்தாச்சே
விளக்கவுரை :
150. ஐயரென்ற காலாங்கிநாதர்
தானறியாத சிறியோர்க்கு அறிவுதந்தார்
உயிரென்ற
உடல்பொருளாவியுந்தான் மூன்றாம் உலகத்தார் கொண்டவர்க்குப் பலந்தானென்றேன்
செய்யமென்ற சிலம்பொலிக்குள்
அவரும்வந்தார் சிரசுவைத்து அவர்பதத்தில் சரணஞ்செய்தேன்
ஐயரென்று எனையாண்டு
ஞானங்காட்டி யெளிமையாஞ் சஞ்சலத்தை யோட்டினாரே
விளக்கவுரை :