166. தானெங்கே பார்ப்பதென்றால்
மூலமாகும் தருகுரும்ப மிலேச்சருக்குங் காணுஞ்ஜோதி
ஆனங்கே ஆதாரத் தளமுங்காணும்
ஆட்டான முப்பாழுங்கடந்து போகும்
கோனெங்கே யமர்வாசற்
குள்ளேபுக்கில் கோடிமதிகோடிரவி யெண்ணொண்ணாது
பூணங்கே பூரணத்தின்
கரையேகாணோம் பூந்துடனே காந்தயம்போல் பொருந்தும்பாரே
விளக்கவுரை :
167. பொருந்துவது எவ்வாறுயென்று
பேசில் பெருந்தீபமுடை திரிபோல் நெய்யுமாகும்
வருந்துவது வருணஜலம்
ரவியுண்டாப்போல் மகாவஞ்சுவர்னண்ட படிகம்போல
தருந்துவது ஜலத்தடங்கும்
குமுளிபோல சேத்தமவன் கூப்பிட்டுக் கேளாப்போல
ஒருந்துவதும் ஒடுங்குவதும்
இதுவோமார்க்கம் உத்தமனே மகத்தோடு உன்னுவுன்னே
விளக்கவுரை :
[ads-post]
168. உன்னுதன்மை ஞானத்துக்கு
ஆதாரமாச்சு உண்மையாஞ்சாந்தமல்லோ யோகச்சார்வு
மண்ணுவன்மை விவேகமென்ற
வாழ்வுமாச்சு வாய்திறக்கா மவுனமொன்றே மனதுக்கின்பம்
நண்ணுவுண்மை
ஞானத்துக்கோடும்வீதி நலிவில்லாத்திடமன்றோ மகத்துவவீரம்
புண்ணுவுண்மை பூரணமாம்
பொறியைத்தள்ளு போக்கோடே மவுனத்தில் பூட்டிநில்லே
விளக்கவுரை :
169. நில்லாமல் மடவார்பால்
மாயத்தூடில் இருத்தலையாங்கொள்ளி மையத்து எரும்புபோலாவாய்
நல்லாமல் காமுகனாய்த்
திரிந்திடாதே கடிதானபாழை தொடந்துதானால்
வல்லாமல் விழிகண்டு
வலையிற்சிக்கி மற்றதுமே சமாதிவிட்டு கழண்டாயானால்
அல்லாமலொன்றுமில்லை
நீயுங்கேட்டால் அதிஷ்டம் உனக்கில்லையென்று அறிந்துகொள்ளே
விளக்கவுரை :
170. கொள்ளென்ற யோகமார்தாம் பார்த்தாரென்றால் குணமான சூடாலையென்ற பிணந்தான்
வள்ளென்ற மூடாபிள்ளை
ஜுவாலமூர்த்தி வண்டையாயிவருக்கு உபதேசித்தார்
புள்ளென்ற வாசியெல்லாம்
போகொட்டாமற் போக்கோடே குண்டிலியிற் கருத்தைப்பூட்டி
வெள்ளென்ற வயசெல்லாம்
விருத்தியாக்கி விளங்கிய அரசருக்கு அருள்செய்வானே
விளக்கவுரை :