போகர் சப்தகாண்டம் 171 - 175 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 171 - 175 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
171. செய்தவனை பெண்ணென்று அறியான்மன்னன் ஜெகத்துவசனம் அவளாலே பேர்ந்தார் ஞானம்
பைதவளப் பதினாறுயுக கற்பந்தான்பரத்தோடெயொன்றாகப் பரிந்துபோனால்
தொய்பவளத் துவாபரமாம் பதத்தில்தானுஞ் சேர்ந்துமே இருவருந்தான் கலந்துபோனார்
கைதளப்போச்சி யவளுதவும் பெண்தாய் கற்புடைய பெண்ணானால் அனையகன்றே

விளக்கவுரை :


172. அனையவே பெண்ணவர்க்கு வந்ததேது அதிகமாய் நால்யுகத்தில் செய்தவப் பயன்தான்
பினையவே பெண்ணான ரூபமாச்சு போதித்த குருவாச்சு பெண்டீராச்சு
மனையவே பதக்க மூத்தாராம்பெண் தன்னோடே பரவியே மூலமாம் உறிதியோகம்
கனையவோ பெண்ணை விட்டாலாகாதென்னில் கனவாலேகாயப்பெண் கலவானப்போ

விளக்கவுரை :

[ads-post]

173. கலந்துமே விண்ணான துறவியென்றார் காமமாம் பெண்ணைவிட்டு நீக்குநீக்கு
அலந்துமே காலாங்கி ஐயர்தாமும் அடித்துமே பெண்ணாசை தள்ளிவிட்டார்
புலைந்துமே பிள்ளைகளை வேறேவேறாய் போயெங்குதிரியுமென்று விடையுமீந்தார்
கலந்துமே கருவூரார் தெற்கே சென்று கடியரிஷிகையில் சாபம் கொண்டிட்டாரே

விளக்கவுரை :


174. கொண்டிட்ட பின்புதான் போதுமப்பாவென்று கொடிதான காந்திமதிக்குள்ளே சென்றால்
என்றுமெனையாண்ட காலாங்கிநாதர் யேகவெளியம்பலத்தே யேகிநின்றார்
பண்டுபராபரனால் கடாட்சத்தால் யான்பாய்ந்துமே விண்ணேறி யோங்கிவந்தேன்
மண்டுமணித் தாயோடு பழக்கமாகி மனமூனித்திரும்பிவந்தேன் மக்கள்பாரே

விளக்கவுரை :


பசுண்தீர்யோகம்

175. வந்தேறி நெஞ்சினுள்ளே நினைவையோடி வளர்நத பனிபுகைபோலே யிழைத்துவோடும்
பந்தேறி நினைவையுன்னிப் பற்றிப்பாரு பரிந்துமேற்கொண்டால் உன்னிப்பாரு
மந்தேறி மகோசரத்தை நின்றுபாரு மருவவே இதற்குள்ளே காலைக்கூட்டு 
புந்தேறி செய்தவர் யாரென்றால்கேளு புசுண்டர் செய்தார் சதாநித்தம் பூட்டியாட்டே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar