171. செய்தவனை பெண்ணென்று
அறியான்மன்னன் ஜெகத்துவசனம் அவளாலே பேர்ந்தார் ஞானம்
பைதவளப் பதினாறுயுக
கற்பந்தான்பரத்தோடெயொன்றாகப் பரிந்துபோனால்
தொய்பவளத் துவாபரமாம்
பதத்தில்தானுஞ் சேர்ந்துமே இருவருந்தான் கலந்துபோனார்
கைதளப்போச்சி யவளுதவும்
பெண்தாய் கற்புடைய பெண்ணானால் அனையகன்றே
விளக்கவுரை :
172. அனையவே பெண்ணவர்க்கு
வந்ததேது அதிகமாய் நால்யுகத்தில் செய்தவப் பயன்தான்
பினையவே பெண்ணான ரூபமாச்சு
போதித்த குருவாச்சு பெண்டீராச்சு
மனையவே பதக்க மூத்தாராம்பெண்
தன்னோடே பரவியே மூலமாம் உறிதியோகம்
கனையவோ பெண்ணை
விட்டாலாகாதென்னில் கனவாலேகாயப்பெண் கலவானப்போ
விளக்கவுரை :
[ads-post]
173. கலந்துமே விண்ணான
துறவியென்றார் காமமாம் பெண்ணைவிட்டு நீக்குநீக்கு
அலந்துமே காலாங்கி
ஐயர்தாமும் அடித்துமே பெண்ணாசை தள்ளிவிட்டார்
புலைந்துமே பிள்ளைகளை
வேறேவேறாய் போயெங்குதிரியுமென்று விடையுமீந்தார்
கலந்துமே கருவூரார் தெற்கே
சென்று கடியரிஷிகையில் சாபம் கொண்டிட்டாரே
விளக்கவுரை :
174. கொண்டிட்ட பின்புதான்
போதுமப்பாவென்று கொடிதான காந்திமதிக்குள்ளே சென்றால்
என்றுமெனையாண்ட
காலாங்கிநாதர் யேகவெளியம்பலத்தே யேகிநின்றார்
பண்டுபராபரனால் கடாட்சத்தால்
யான்பாய்ந்துமே விண்ணேறி யோங்கிவந்தேன்
மண்டுமணித் தாயோடு பழக்கமாகி
மனமூனித்திரும்பிவந்தேன் மக்கள்பாரே
விளக்கவுரை :
பசுண்தீர்யோகம்
175. வந்தேறி நெஞ்சினுள்ளே
நினைவையோடி வளர்நத பனிபுகைபோலே யிழைத்துவோடும்
பந்தேறி நினைவையுன்னிப்
பற்றிப்பாரு பரிந்துமேற்கொண்டால் உன்னிப்பாரு
மந்தேறி மகோசரத்தை நின்றுபாரு
மருவவே இதற்குள்ளே காலைக்கூட்டு
புந்தேறி செய்தவர்
யாரென்றால்கேளு புசுண்டர் செய்தார் சதாநித்தம் பூட்டியாட்டே
விளக்கவுரை :