2136. குருவான மருந்ததனை
பதனம்பண்ணு குவலயத்தில் குஷ்டமுதல் ரோகிக்கப்பா
திருவான மருந்ததனை
தின்றுவப்பா திறமுடனே மண்டலந்தான் கொண்டபோது
பருவான தேகமடா கற்றூணாகி
பாரினிலே வெகுகோடி காலம்வாழ்வாய்
தருவான காலரிஷி சித்தன்போல
தாரிணியில் நீயுமொரு சித்தனாமே
விளக்கவுரை :
2137. சித்தான சித்தர்முனி
செய்யும்வேதை தேசத்திலாரேனுஞ் செய்யமாட்டார்
பத்தியுடன் காலாங்கி
நாயர்பாதம் பட்சம்வைத்து வடியேனும் உங்களுக்காக
முத்திபெற யடிவணங்கி
சாமிதன்னை முடிவணங்கி இந்நூலை வெளியிலிட்டேன்
புத்திவானாயிருந்தால்
யெல்லாஞ்சித்தி பூதலத்தில் முழுமக்கள் அறியார்தாமே
விளக்கவுரை :
[ads-post]
2138. தாமான சாத்திரங்கள்
மிகவுஞ்சொல்லி தாரணியில் பித்தனைப்போல் பினத்திக்கொண்டு
பேமானியாகவல்லோ
திரிந்துகொண்டு பேரான சாத்திரங்கள் பொய்யுமாக்கி
சாமானியவான்போல வாதுபேசி
சதாகாலம் யோனியிடவாசையாலே
சாமானியசைதன்னிய வாசையாலே கடைகெட்டு
இடைகெட்டு கலங்கினாரே
விளக்கவுரை :
2139. கலங்கியே பேடிபோல்
நாமங்கொண்டு கதிதனக்கு யிடையூறு செய்துகொண்டு
மலங்கியே துப்புரவாய்
எல்லாந்தோற்று மானிலத்தில் மதிப்பற்று மானங்கெட்டு
தவங்கெட்டு பதிகெட்டு
பலமுங்கெட்டு தாறுமாறாகவே கஞ்சாகொண்டு
புலம்பியே மதுபாணம்
மிகுதியாகி பூதலத்தில் கெட்டலைந்தார் கோடிதாமே
விளக்கவுரை :
2140. கோடியாமிருந்தவரை யானுமப்பா
பூதலத்தில் குளிகைகொண்டு பறக்கும்போது
வாடியே யிருந்தவரை
கண்டேன்கோடி வாய்பிறப்பைக் கண்டறிந்தேன் லக்கோயில்லை
நாடியே காலாங்கிநாயர்பாதம்
நான்தொழுது பாடிவிட்டேன் மறைப்பையெல்லாம்
தேடியே யலையாமல் மாணாகேளு
தேசத்தில் சித்தனைபோல் வாழ்குவாயே
விளக்கவுரை :