2141. வாழ்கவே நாகமது சேரைவாங்கி நலம்பெறவே இலுப்பைநெய்யில் சுத்திசெய்து
மூழ்கவே கண்ணாடி கல்லினாலே
முயலவே தானரைத்துக்கங்கிபூட்டி
தாழ்கவே கோழியென்ற
புடந்தானப்பா தப்பாது மூசைக்குள் நாகம்வைத்து
ஏழ்கவே பொடிதனையே தூவிமைந்தா
யெழிலாக வுருக்குபோல் சீலைசெய்யே
விளக்கவுரை :
2142. செய்யவே சீலையது
காய்ந்தபின்பு செப்பினேன் கோழியென்ற புடம்தானப்பா
பையவே போட்டபின்பு
எடுத்துப்பாரு பாங்கான நாகமது மஞ்சளேறி
மெய்யவே கண்ணதுவும்
மிகவொடுங்கி மிக்கான நாகமது வெளுமையாகும்
மிய்யவே இப்படியே
பத்துமுறைபோடு பேறானவெள்ளியது பேசலாமே
விளக்கவுரை :
[ads-post]
2143. பேசலாம் சுக்கானின்
கல்லையப்பா பெருமையுடன் சேரதுவும் தானெடுத்து
நாசமுள நாலுவகை
செயநீர்தன்னால் நலம்பெறவே தானரைப்பாய் நாலுசாமம்
பாசமுடன் பில்லைதட்டி
காயவைத்து பாகமுடன் வோட்டிலிட்டு சீலைசெய்து
நேசமுடன் ரவிதனிலே காயவைத்து
நிதமுடனே கெஜபுடத்தில் போட்டிடாயே
விளக்கவுரை :
2144. போடவே பற்பமது என்னசொல்வேன்
பொலிவான தவளமது நிறம்போலாகும்
கூடவே நாகத்துக் கங்கிபூட்டி
குமுறவே மூசையில் கீழ்மேலிட்டு
வேடவே குழிவெட்டி
புடத்தைப்போடு தெளிவாகும் நாகமது தெளிமையாகும்
நாடவே பத்துமுறை
இப்படியேபோடு நலமான துய்யானுக் கொப்பதாமே
விளக்கவுரை :
2145. ஒப்பான வெள்ளியது
பத்துக்கொன்று ஓங்குபெற சுயவெள்ளி கூட்டியாடு
செப்பான பாத்திரங்கள்
இதற்கீடல்ல சேனவித வாபரணமிதனாலாகும்
உப்பான காய்ப்புக்கு
வெளுமைகாட்டும் ஓகோகோநாதாக்கள் அதீதவித்தை
மெய்யான சாஸ்திரங்கள்
உளவுபார்த்து மேன்மையுடன் பாடிவைத்தேன் பண்பாய்த்தானே
விளக்கவுரை :