2146. தானான சாத்திரத்தில்
அனேகம்பேர்கள் சட்டமுடன் பாடிவைத்தார் வேண்டுமாற்கம்
வேனான வெகுநூலில்
வெள்ளிசொன்னார் வெளியாகச்சொல்லவில்லை இந்தபாகம்
பானான காலாங்கி தனைவணங்கி
பாடினேன் சத்தகாண்டம் பண்பதாக
கோனான குருவருளால்
அடியேன்தானும் குவலயத்தில் இரைத்துவிட்டேன் மாந்தர்க்காமே
விளக்கவுரை :
2147. ஆமேதான்
இன்னமொருகருமானங்கேள் அப்பனே வெள்ளியென்ற காடிக்காரம்
தாமேதான் துலாமதுவும்
ஒன்றேயாகும் சார்பான வேங்கையுட பாலாலாட்டி
வேமேதான் சாமமது
வரைத்துமேதான் விருப்பமுடன் பில்லைதட்டிக் காயவைத்து
தாமேதான் சொன்னபடி
வகலில்வைத்து வலம்பெறவே சீலையது வலுவாய்ப்பண்ணே
விளக்கவுரை :
[ads-post]
2148. பண்ணியே கோழியென்ற
புடத்தைப்போடு பாகமுடன் பற்பமது பகரப்போமோ
வண்ணமுடன் பற்பமதை
வெள்ளீயத்தில் வாகாக கொடுத்திடவே நீரைவாங்கும்
திண்ணமுடன் பத்துக்கு
ஒன்றுதாக்கு திறமான வெள்ளீயம் நீரைவாங்கு
வண்ணமுள்ள வெள்ளியது
சொல்லப்போமோ வளமையுடன் நாதாக்கள் கூத்துதாமே
விளக்கவுரை :
2149. கூத்தான கைபாகம் செய்பாகந்தான் குவலயத்தில் கோடியுண்டு யார்தான்காண்பர்
மத்தான சாத்திரத்தில்
மறைத்துவைத்தார் மார்க்கமுடன் அடியேனும் தாள்பணிந்து
வேத்தான காலாங்கிநாயர்பாதம்
விருப்பமுடன் போற்றியல்லோ தொழுதேன்யானும்
நேர்த்தியுடன் பாடிவைத்தேன்
போகர்யானும் நேர்மையுடன் மாணாக்கள் பிழைக்கத்தானே
விளக்கவுரை :
2150. தானான முன்வர்களில்
சித்தரதாமும் தயவாகப்பாடிவைத்தார் வெகுநூலப்பா
கோனான கமலரிஷிகள்தானும்
கொட்டினார் கோடிமுறை என்னைப்போல
தேனான சாத்திரத்தில்
என்னைப்போல தெளிவாகச் சொல்லவில்லை யாருமப்பா
வானான யெந்நூலில் ஒன்றும்
பொய்யா வளமையுடன் போகரிஷிவன்மைபாரே
விளக்கவுரை :