2151. வண்மையாய்
போகரிஷிமார்க்கம்பாரு வாகாகத் தன்னுடைய நூல்கள்யாவும்
உண்மையாம் சித்தருக்கும்
ரிஷிகளுக்கும் ஒருபோதும் பொய்யாது மெய்யேயாகும்
தன்மையாய் பாடிவைத்தேன்
சத்தகாண்டம் சதாகாலம் மானிடர்க்கு உறுதிநூலாம்
திண்மையாய் குருநூலாம்
ஏழாயிரந்தான் திறமாக வாய்த்ததுவே சீனத்தார்க்கே
விளக்கவுரை :
2152. சீனமென்றால் தேசமது
புதுமைமெத்த சிறப்பான நூல்களெல்லாம் அங்கேயுண்டு
வானமுடன் தானிருக்கும்
அதிசயங்கள் வாகான பூலோகமர்மமெல்லாம்
ஞானமுடன் பாடிவைத்தார்
கமலர்தாமும் மானிலத்தில் பாடிவைத்தோர்கோடாகோடி
தாளமது இருக்குமிடம்
யாமும்கண்டோம் தராதலத்தில் எமைப்போலே காண்பாருண்டோ
விளக்கவுரை :
[ads-post]
2153. உண்டான வெள்ளியது
போக்குச்சொல்வேன் ஓகோகோ நாதாக்கள் பரிசவேதை
பண்டான வெள்வங்கம்
சேர்தானொன்று பாளமென்ற சுக்கான் நல்லசுன்னம்போடு
திண்டான காடியென்ற
சுண்ணம்போடு திறமாகத் தானுருக்கியெடுத்துப்பாரு
வண்டான வெள்வங்கம்நீரைவாங்கி
வாகான வெட்டையதுவாகும்பாரே
விளக்கவுரை :
2154. வெட்டையாம் சூதமது
வொக்கச்சேர்த்து வெடியுப்புச் சுண்ணமது நாலாய்ச்சேர்த்து
சட்டமுடன் தானுருக்கி
எடுத்துப்பாரு கசடற்ற துய்யானாம் வெள்ளியப்பா
மட்டமென்ற வெள்ளியது
ஒக்கச்சேர்த்து மதிப்புடனே சரியெடையாய்ச் சேர்த்துப்பாரு
திட்டமுள்ள ரூபாய்க்கு
சரியதாகும் திறமான வெள்ளியது போக்குத்தானே
விளக்கவுரை :
2155. போக்கென்று விடுகாதே
புண்ணியாகேள் புகலுகிறேன் சூதமென்ற செந்தூரத்தை
தீயென்ற கெந்தகத்தின்
தயிலமப்பா திறமான பாஷானதயிலங்கூட்டி
காயென்ற கருஞ்சூரைத்
தயிலஞ்சேர்த்து கருவாகத்தானரைப்பாய் சேரைசூதம்
பேயென்ற சுரைக்காயின்
தயிலத்தாலே பிசகாமல் தானரைப்பாய் தயிலமெட்டே
விளக்கவுரை :