2156. எட்டான சாமமது வரைத்தபோது
என்மகனே சூதமது மடிந்துபோச்சு
கட்டான சூதமது மாண்டபோது
காணலாம் கோடிவித்தை சூதத்தாலே
இட்டமுடன் சூதத்தை
பில்லைதட்டி யெழிலான ரவிதனிலே காயவைத்து
மட்டான ஓட்டிலிட்டுச்
சீலைசெய்து மார்க்கமுடன் புடம்போட சிவக்குந்தானே
விளக்கவுரை :
2157. சிவப்பான செந்தூரம்பதனம்பண்ணு சிவசிவாவெள்ளிதனில் பத்துக்கொன்று
நயப்புடனே தானுருக்கிக்
கொடுத்துப்பாரு நலமான மாற்றதுவுமெட்டதாகும்
பயமுடனே பத்துக்கு ஒன்று
தங்கம் பாகமுடன் தானுருக்கி வாரடித்து
புவமுடனே புடமதுவும்
மூன்றுபோட புண்ணியனே மாற்றதுவும் பசுமையாமே
விளக்கவுரை :
[ads-post]
2158. பசுமையாந் தங்கமது
என்னசொல்வேன் பாரினிலே நாதாக்கள் செய்யும்வேதை
நிசமுடைய புண்ணியர்க்கு
வாய்க்குமல்லால் நிஷ்டூரப்பாவிகட்கு வாய்க்குமோசொல்
வசுவான பசுபதியோகியோர்க்கு
வாய்த்தாலே குருபூசைக் கொவ்வும்வேதை
சிசுபாலர்க்கொப்பான
சிவயோகிக்கு சிறப்புடனே வாய்க்குமிது திண்ணந்தானே
விளக்கவுரை :
2159. தானான திரிகுளிகை
சொல்லக்கேளு சாற்றுகிறேன் ரசமுடனேதாரங்கெந்தி
கோனான குருபரன்தன் அருளினாலே
கூறுவேன் ஆறுவகைசெயநீர்தன்னால்
வேனான நாற்சாமமரைத்தபோது
மிக்கான செயநீரால் சூதம்மாண்டு
பானான சரக்கிரண்டு
மொன்றாய்க்கூடி பததுடனே மெழுகதுபோலாகும்பாரே
விளக்கவுரை :
2160. பாரேதான் மெழுகதனை
வட்டுதட்டி பாகமுடன் ரவிதனிலே காயவைத்து
சீரேதான் ஓட்டகலில்
வைத்துமூடி சிறப்புடனே சில்லிட்டுச் சீலைசெய்து
நேரேதான் மணல்மறைவில்
புடத்தைப்போடு நேர்ப்பாக வாறினபின்னெடுத்துப்பாரு
கூரேதான் செந்தூரமென்ன
சொல்வேன் கொடியதோர் மேகவண்ணமாகுந்தானே
விளக்கவுரை :