போகர் சப்தகாண்டம் 2156 - 2160 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2156 - 2160 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2156. எட்டான சாமமது வரைத்தபோது என்மகனே சூதமது மடிந்துபோச்சு 
கட்டான சூதமது மாண்டபோது காணலாம் கோடிவித்தை சூதத்தாலே
இட்டமுடன் சூதத்தை பில்லைதட்டி யெழிலான ரவிதனிலே காயவைத்து
மட்டான ஓட்டிலிட்டுச் சீலைசெய்து மார்க்கமுடன் புடம்போட சிவக்குந்தானே

விளக்கவுரை :


2157. சிவப்பான செந்தூரம்பதனம்பண்ணு சிவசிவாவெள்ளிதனில் பத்துக்கொன்று
நயப்புடனே தானுருக்கிக் கொடுத்துப்பாரு நலமான மாற்றதுவுமெட்டதாகும்
பயமுடனே பத்துக்கு ஒன்று தங்கம் பாகமுடன் தானுருக்கி வாரடித்து
புவமுடனே புடமதுவும் மூன்றுபோட புண்ணியனே மாற்றதுவும் பசுமையாமே

விளக்கவுரை :

[ads-post]

2158. பசுமையாந் தங்கமது என்னசொல்வேன் பாரினிலே நாதாக்கள் செய்யும்வேதை
நிசமுடைய புண்ணியர்க்கு வாய்க்குமல்லால் நிஷ்டூரப்பாவிகட்கு வாய்க்குமோசொல்
வசுவான பசுபதியோகியோர்க்கு வாய்த்தாலே குருபூசைக் கொவ்வும்வேதை
சிசுபாலர்க்கொப்பான சிவயோகிக்கு சிறப்புடனே வாய்க்குமிது திண்ணந்தானே

விளக்கவுரை :


2159. தானான திரிகுளிகை சொல்லக்கேளு சாற்றுகிறேன் ரசமுடனேதாரங்கெந்தி
கோனான குருபரன்தன் அருளினாலே கூறுவேன் ஆறுவகைசெயநீர்தன்னால்
வேனான நாற்சாமமரைத்தபோது மிக்கான செயநீரால் சூதம்மாண்டு
பானான சரக்கிரண்டு மொன்றாய்க்கூடி பததுடனே மெழுகதுபோலாகும்பாரே

விளக்கவுரை :


2160. பாரேதான் மெழுகதனை வட்டுதட்டி பாகமுடன் ரவிதனிலே காயவைத்து
சீரேதான் ஓட்டகலில் வைத்துமூடி சிறப்புடனே சில்லிட்டுச் சீலைசெய்து
நேரேதான் மணல்மறைவில் புடத்தைப்போடு நேர்ப்பாக வாறினபின்னெடுத்துப்பாரு
கூரேதான் செந்தூரமென்ன சொல்வேன் கொடியதோர் மேகவண்ணமாகுந்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar