2161. வன்னமாஞ் செந்தூரமிப்படியே
பத்துவளமுடனே போட்டுவர விபரங்கேளு
சுன்னமென்ற கடுங்கார
மிகவுமாகி சுடரொளியாங் காந்தியது மெத்தப்பற்றி
வின்னமில்லா கரடுகளுமில்லா
மற்றான் மிக்கான பூப்போல வுதிருங்கண்டீர்
சொன்னபடி யின்னுமந்த
செந்தூரத்தைச் சுகமுடனே தானரைத்துத் தங்கங்கூட்டே
விளக்கவுரை :
2162. கூட்டையிலே பத்துக்கு
ஒன்றுதங்கம் குணமாகத்தான்சேர்த்து வரைத்துமைந்தா
வாட்டமுடன்
ஆறுவகைசெயநீர்தன்னால் வளமாகத் தானரைப்பாய் நாலுசாமம்
நீட்டமுடன் ரவிதனிலே
காயவைத்து நினைவாகப் பின்னுமதைப் பொடியதாக்கி
தேட்டமுடன் காசிபென்ற
குப்பிதன்னைத் தெளிவாகச் சீலையது வலுவாய்ச்செய்யே
விளக்கவுரை :
[ads-post]
2163. செய்யவே குப்பியது
காய்ந்தபின்பு திறமுடனே சரக்கெல்லாம் குப்பிக்கேற்றி
பையவே மாக்கல்லால்
கொண்டுமூடி பாங்குபெற சீலையது வலுவாய்ச்செய்து
மெய்யுடனே
தளவரையாஞ்சட்டிதன்னில் மேன்மையுடன் மணலதனைக்கொட்டிமைந்தா
உய்யவே குப்பிநடுமையம் வைத்து
உத்தமனே மேலுமந்த மணலைக்கொட்டே
விளக்கவுரை :
2164. கொட்டையிலே குப்பிவாய்த்
தெரியமூடி குடிலமுடன் மேற்சட்டி கவிழ்த்துமைந்தா
திட்டமுடன் சீலையது
வலுவாய்ச்செய்து திறமுடனே வாலுகையாம் அடுப்பிலேற்றி
சட்டமுடன் தானெரிப்பாய்
எட்டுசாமம் சார்பாக வாறினபின்னெடுத்துப்பாரு
வெட்டவெளிக்
காறாடாவிடத்திலப்பா விருப்பமுடன் குப்பியைநீ வைத்துப்போற்றே
விளக்கவுரை :
2165. போற்றவே மூன்றுநாளானபின்பு பொங்கமுடன் குப்பியை திறந்துபார்க்க
ஏற்றமுள்ள செந்தூரம்
மிகவும்பார்த்து யென்மகனே காந்தியது புகலப்போமோ
தேற்றமுடன்
சீஷாவிற்பதனம்பண்ணு திறமுடைய செந்தூர மனுபானந்தான்
கூற்றனுக் கிடையின்றி
தேனிலுண்ணக் குடிலம்விட்டேகுமடா திண்ணந்தானே
விளக்கவுரை :