2166. திண்ணமாம் வெண்ணைதனில்
கொள்ளலாகும் திறமான நெய்யிலும்கொள்ளலாகும்
வண்ணமுள்ள சூரத்தில்
கொள்ளலாகும் வாகான லேகியத்தில் கொள்ளலாகும்
எண்ணமுடன்
எய்தவனுபானத்தாலும் எழிலுடனே மண்டலங்கள் கொள்ளலாகும்
உண்ணயிலே சகலரூப
வியாதியெல்லாம் வுத்தமனே தேகம்விட்டுச் சுண்ணுந்தானே
விளக்கவுரை :
2167. சுண்ணுமே மேகமென்ற ராஜனுக்கு
சத்துருவா மிம்மருந்து சாற்றக்கேளு
குண்ணிவிடும் சிலவிஷயங்கள்
யாவனைத்துங் குவலயத்தில் நிற்காது பறந்தேயோடும்
திண்ணமுடன் செந்தூரப்போக்கு
சொல்வேன் திறமுடைய மக்களாயிருப்பாயானால்
நண்ணமுடன் வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று
நலமுடனே கொடுத்துருக்க மாற்றெட்டாமே
விளக்கவுரை :
[ads-post]
2168. மாற்றான வெள்ளிசெம்பை
யூதிப்போடு மகத்தான வெள்ளியது மாற்றுமாகி
தேற்றான பசைமையது
யதிகங்கொண்டு தெளிவுடனே மாற்றதுவு மெட்டதாகும்
சாற்றவே சிவயோகி
செய்யும்வேதை தாரணியிலாரேனுஞ் செய்யமாட்டார்
போற்றவே
புத்தியுள்ளானாவானாகில் பொங்கமுடன் செய்துகொள்வான் வாதியாமே
விளக்கவுரை :
2169. வாதியாய்ச்
சகலவிதவண்மையெல்லாம் வாகுடனே கண்டறிந்து வளமாய்ச்சொல்வேன்
சாதியிலே யொருவனப்பா
சன்மார்க்கன்தான் தாரிணியில் தானிருப்பான் ஒருவர்காணார்
மாதிமையாம் துஷ்டருடன்
கூடமாட்டான் மானிலத்திலடக்கமுற்று வாழ்வானப்பா
சோதிமயங்காணுவான்
சுந்தரன்தான் சூட்சாதிமர்மத்தை வெளிவிடானே
விளக்கவுரை :
2170. விட்டானே யாமானால்
தலைதெறிக்கும் வேதாந்தத் தாயவளுமுன்னே நிற்காள்
தொட்டதொருவேலையெல்லாம்
துகளாப்போகும் தொடருமே வினைதானும் துரத்திக்கொள்ளும்
விட்டகுறைநேருமானால்
தாமேயெய்தும் விண்ணுலகில் நாதாக்கள் செய்யும்வேதை
தட்டியஏ
பராபரியைத்தொழுதுபோற்றி தராதலத்தில் சித்தனாய்ப் பிறப்பாய்த்தானே
விளக்கவுரை :