2336. பிச்சான பச்சோனான்
பிச்சுதானும் பீரான வார்த்தையுட பிச்சுதானும்
மச்சான சாரையுட பிச்சுதானும்
மகத்தான மயிலினுட பிச்சுதானும்
கச்சான கரும்பூனை
பிச்சுதானும் கருவான வவ்வாளின் பிச்சுதானும்
பச்சான பாம்பினுட
பிச்சுதானும் பாங்கான வாணையிட பிச்சுமாமே
விளக்கவுரை :
2337. ஆமேதான் இத்தனையும்
ஒன்றாய்கூட்டி அப்பனே முன்சொன்ன தயிலத்தாட்டி
வேமேதான் கபாலமென்ற
ஓட்டிலப்பா விருப்பமுடன் மைபிடித்து செப்பக்கேளு
நாமேதான் சொன்னபடி
மையின்மார்க்கம் நலமுடனே பரணைதனில் பதனம்பண்ணு
போமேதான் நிர்வானி
பூசைசெய்து பொங்கமுடன் உருவேற்றி பூசிப்பாயே
விளக்கவுரை :
[ads-post]
2338. பூசித்து மைதனையே
எடுத்துமைந்தா புகட்சியுடன் லாடமதில் திலதத்தீட்டி
நேசித்து ராஜரிடம்
சென்றாயானால் நேர்மையுடன் நினைத்ததெல்லாம்வசியமாகும்
காசினியில் உன்னைப்போல்
சித்தனுண்டோ கைலாசம்காணியது வுனக்கேயாகும்
வாசியுடன் யோகநிலை
நின்றுகொண்டு மகிழ்ச்சியுடன் சதாநித்தம் வாழலாமே
விளக்கவுரை :
2339. வாழவே வின்னமொரு
மார்க்கம்பாரு மகத்தான விலங்கைபுரி வேந்தனப்பா
நீழவேதான் செய்தகுளிகையப்பா
நீணிலத்தில் மானிடர்க்கு கூறலாச்சு
தாழவே செம்மண்ணம்
பூமிதன்னில் தயவுடனே சென்றுமல்லோ குழிதான்வெட்டி
ஆழவே குழிதனிலே
ஈச்சம்வெல்லம் அப்பனே வரவுவைக்கல் கலந்துபோடே
விளக்கவுரை :
2340. போடவே யிராமுழுதும்
சென்றபின்பு பொங்கமுடன் காலையில் பார்த்தபோது
நீடவே பூநாகம்
சூழ்ந்திருக்கும் நெடிதான பூநாகமெடுத்துமைந்தா
வாடவே திரியாதே பூநாகத்தை
வாகுடனே தானெடுத்து மண்ணைப்போக்கி
கூடவே புளிப்பென்ற
மோறுதன்னால் குணமான மண்ணையெல்லாம் போக்கிடாயே
விளக்கவுரை :