போகர் சப்தகாண்டம் 2341 - 2345 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2341 - 2345 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2341. போக்கியபின் பூநாகமெடுத்துபாலா பொருமையுடன் கெந்தியது சமனாய்ச்சேர்த்து
நோக்கமுடன் ஆறுவகைசெயநீர்தன்னால் நொய்யவே தானரைப்பாய் நாலுசாமம்
ஆக்கமுடன் பில்லையது லகுவாய்ச்செய்து அப்பனே ரவிதனிலே காயவைத்து
ஊக்கமுடன் சில்லிட்டுச் சீலைசெய்து வுத்தமனே புடம்போடக் கருப்புமாமே  

விளக்கவுரை :


2342. கருப்பான மருந்துக்கு நாலிலொன்று கருத்துடனே காரமது பொரித்துப்போடு
தெருப்பான வஜ்ஜிரமாங் குகையில்வைத்து தெளிமையுடன் தானடைத்து சீலைசெய்து
நெருப்பான வஜ்ஜிரமாமூலையில்வைத்து நேர்மையுடன் தானுருக்கி யெடுத்துப்பாரு
பொருப்பான ரவியதுதான் புகலப்போமோ பொன்னவனே யுனக்கீடா ருலகில்தானே

விளக்கவுரை :

[ads-post]

2343. தானவனே பூநாக சடசம்புதன்னால் தாரிணியில் தீகமென்ற வித்தைசெய்வார்
வானவனுஞ் செயவரியான் மானிலத்தில் வளமையுடன் இப்பாகம் யாரும்சொல்வார்
ஆனதினால் வுந்தனுக்கு கருவுசொன்னேன் அப்பனே கருவுளவு வெளியிடாதே
பானயெனும் பரணையது செய்துபாலா பஞ்சமுடன் சூதமதை நிறையவூத்தே 

விளக்கவுரை :


2344. ஊத்தியபின் மேல்திருவல் கொண்டுமூடி வுத்தமனே சாதமது வேகும்போது
தோத்தவே மத்தினடு சொருகிப்போடு சுந்தரனே யிறினபின் னெடுத்துப்பாரு
காத்திரமாம் பரணையது திருவல்தன்னைப் பக்குவமாய்த் தானெடுக்கும் சூதந்தானும்
மாத்தமென்ற சத்துருவால் மடிந்துபின்னும் மாசற்ற வெண்ணையது போலாம்பாரே

விளக்கவுரை :


2345. பாரேதான் வெண்ணைதனை யெடுத்துக்கொண்டு பாகமுடன் மத்தங்காய் வுள்ளழுத்தி
சாரமுடன் சுண்ணாம்புச் சீலைசெய்து சட்டமுடன் நான்கெருவிற் புடத்தைப்போடு
தீரமுடன் தானெடுத்துப் பார்க்கும்போது திறலான சூதமது கற்போலாகும் 
காரமது யின்னமுந்தான் ஏறுதற்கு கருவாகச் சாரனையும் இன்னமேற்றே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar