2341. போக்கியபின் பூநாகமெடுத்துபாலா பொருமையுடன் கெந்தியது சமனாய்ச்சேர்த்து
நோக்கமுடன்
ஆறுவகைசெயநீர்தன்னால் நொய்யவே தானரைப்பாய் நாலுசாமம்
ஆக்கமுடன் பில்லையது
லகுவாய்ச்செய்து அப்பனே ரவிதனிலே காயவைத்து
ஊக்கமுடன் சில்லிட்டுச்
சீலைசெய்து வுத்தமனே புடம்போடக் கருப்புமாமே
விளக்கவுரை :
2342. கருப்பான மருந்துக்கு
நாலிலொன்று கருத்துடனே காரமது பொரித்துப்போடு
தெருப்பான வஜ்ஜிரமாங்
குகையில்வைத்து தெளிமையுடன் தானடைத்து சீலைசெய்து
நெருப்பான
வஜ்ஜிரமாமூலையில்வைத்து நேர்மையுடன் தானுருக்கி யெடுத்துப்பாரு
பொருப்பான ரவியதுதான்
புகலப்போமோ பொன்னவனே யுனக்கீடா ருலகில்தானே
விளக்கவுரை :
[ads-post]
2343. தானவனே பூநாக சடசம்புதன்னால்
தாரிணியில் தீகமென்ற வித்தைசெய்வார்
வானவனுஞ் செயவரியான்
மானிலத்தில் வளமையுடன் இப்பாகம் யாரும்சொல்வார்
ஆனதினால் வுந்தனுக்கு
கருவுசொன்னேன் அப்பனே கருவுளவு வெளியிடாதே
பானயெனும் பரணையது
செய்துபாலா பஞ்சமுடன் சூதமதை நிறையவூத்தே
விளக்கவுரை :
2344. ஊத்தியபின் மேல்திருவல்
கொண்டுமூடி வுத்தமனே சாதமது வேகும்போது
தோத்தவே மத்தினடு
சொருகிப்போடு சுந்தரனே யிறினபின் னெடுத்துப்பாரு
காத்திரமாம் பரணையது
திருவல்தன்னைப் பக்குவமாய்த் தானெடுக்கும் சூதந்தானும்
மாத்தமென்ற சத்துருவால்
மடிந்துபின்னும் மாசற்ற வெண்ணையது போலாம்பாரே
விளக்கவுரை :
2345. பாரேதான் வெண்ணைதனை
யெடுத்துக்கொண்டு பாகமுடன் மத்தங்காய் வுள்ளழுத்தி
சாரமுடன் சுண்ணாம்புச்
சீலைசெய்து சட்டமுடன் நான்கெருவிற் புடத்தைப்போடு
தீரமுடன் தானெடுத்துப்
பார்க்கும்போது திறலான சூதமது கற்போலாகும்
காரமது யின்னமுந்தான்
ஏறுதற்கு கருவாகச் சாரனையும் இன்னமேற்றே
விளக்கவுரை :