போகர் சப்தகாண்டம் 1356 - 1360 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1356 - 1360 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1356. பூண்டேனே கடலோரம் விட்டுநீங்கி பொங்கமுடன் மேருவரையேறிப்போனேன்
மீண்டேனே கானாறு குகைதான்தாண்டி மிக்கான சுனைமுதலுங் கண்டேன்யானும்
தாண்டியே மேலவரை யேறிப்போனேன் தடாகமுண்டு வதிசயங்கள் கண்டேன்யானும்
வேண்டியே தவசுடனே ரிஷிகள்கோடி விரைவான செந்நிறக்கொக்குமாமே

விளக்கவுரை :


1357. கொக்கான சிவந்ததொரு காக்கைக்கண்டேன் குயிலுடனே மயிலாடல் பாடக்கண்டேன்
மிக்கான செம்புலியும் பசுவுங்கூட மேன்மையுடன் தடாகமதிலிருக்கக் கண்டேன்
வெக்கான புகையுடனே பனிகள்தனில் வெள்ளானை மேய்ந்துவரும் வண்மைகண்டேன்
சுக்கான பாறைதன்னில் பொன்னுங்கண்டேன் சூட்சமுனாளியுட மிருகந்தானே

விளக்கவுரை :

[ads-post]

1358. தானான கல்லானையானுங்கண்டேன் தாக்கான சிங்கமுதல் வேங்கைகண்டேன்
பானான படிகமென்ற நதியைகண்டேன் பாங்கான கெம்பாறு குகையுங்கண்டேன்
வேனான சஞ்சீவி மூலியுண்ட வெளியான செந்தூரக்காலுமுண்டு
மானான குளத்தருகே சமாதிகோடி மதிப்பான சித்தர்களைக் கண்டிட்டேனே

விளக்கவுரை :


1359. கண்டிட்டென் சித்தர்களை வணங்கியானும் கைலாசம் பார்க்கவென்று களிப்பாய்வந்தேன்
கண்டிட்டேன் பொன்கருடன் வெள்ளைகாக்கை கண்காணாபச்சைமலைச சித்தர்கண்டேன்
கண்டிட்டேன் ரிஷிமுனிவர் ஞானிகண்டேன் காலாங்கிநாதரையான் மனதிலெண்ணி
கண்டிட்டேனவர்பாதம் பணிந்துநின்றேன் கடாட்சித்து வெந்தனுக்கு வருள்சொன்னாரே

விளக்கவுரை :


1360. அருள்சொன்னார் வேதாந்தமெனக்களித்தார் அப்பனேசூட்சமத்தின் நேர்மைசொன்னார்
பொருள்சொன்னார் சித்தரகளது மறைப்புமார்க்கம் பூட்டினார் கருநிறை மறைப்புயாவும்
இருள்சேர்ந்த காட்டகத்தி லென்னைக்கண்டு யேற்றமுடன் காயாதிகற்பந்தன்னை
தெருளுடனே கூடுவிட்டு கூடுபாயும் திறமான வித்தைதன்னை தெரிவித்தாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar