1351. பிழைக்கையிலே யெந்தனையும்
பட்சிபார்த்து பிரியமுடன் யாரப்பா வென்றுகேட்க
அழைக்கையிலே யானுமங்கே
கிட்டிப்போய் அன்பான பட்சியிட மருகில்நின்று
தழைக்கவே வென்பேரு
போகரென்றேன் தயவுடனே விக்கிரியைக் காணவந்தேன்
முழக்கையுடன் சித்தர்முனி
ரிஷிகள்கூடி முக்கியமா யுபதேசஞ்செய்திட்டாரே
விளக்கவுரை :
1352. செய்யவே விடைபெற்று
குளிகைபூண்டு செயலுடனே மானிடர்கள் பிழைக்கவென்று
மெய்யவே மேதினியில்
போறேனென்றேன் மிக்கான பட்சியுமெனைத்தடுத்து
பையவே யெந்தனுக்குப்
பிழைக்கும் மார்க்கம் பலவதமாந் தொழிலனைத்து முரைக்கலாச்சு
உய்யவே காயாதிகற்பங்
கொண்டேன் வுற்பனமாம் வைப்புமுதல் தெரிந்திட்டேனே
விளக்கவுரை :
[ads-post]
1353. தெரியவே பட்சியுட
யுபதேசத்தால் தேசத்திலுள்ளதொரு மார்க்கமெல்லாம்
புரியவே யெந்தனுக்குக்
காண்பித்தேதான் பூலோகம்போவதற்கு விடையுந்தந்து
சரியவே கிரியைவிட்டு
கீழிறங்கி சாந்தமுடன் வந்துநிற்கும் வேளைதன்னில்
உரியவே பொன்பட்சி
யொன்றுகண்டேன் வுத்தமனே யதன்பெருமை சொல்லக்கேளே
விளக்கவுரை :
1354. சொல்லவே பொன்பட்சி
கண்டேன்யானும் சுத்தமுட னதனருகில் வந்துநின்றேன்
வெல்லவே யெந்தனையும்
பார்த்துமேதான் மேதினியில் யாரென்று என்னைக்கேட்க
புல்லவே யென்பஏரு
போகரென்றேன் புகழான மேருகிரிகாணவென்று
மெல்லவே குளிகையது
பூண்டுகொண்டு மேதினியிலிட்டுமல்லோ வந்திட்டேனே
விளக்கவுரை :
1355. வந்திட்டேன் என்றதுமே
என்னைப்பார்த்து வணக்கமுடன் என்பேரில் கிருபைவைத்து
பொந்திட்டு யென்னுடனே
வாவென்றென்ன பொலிவாகப் பட்சியுடன் குளிகைபூண்டு
பந்திட்டு யான்பறந்தேன்
பட்சிமார்க்கம் பாகுடனே கடலோரம் போயிருந்தேன்
தந்திட்ட தெந்தனுக்கு
வாணிமுத்து தாக்கான மாலையது பூண்டேன்பாரே
விளக்கவுரை :

