1346. சொல்லவே விடைபெற்று
படியிறங்கி சூட்சமுடன் குளிகைதனைபூண்டுகொண்டு
மெல்லவே யடிநோக்கித்
திரும்பும்போது மேலான ரிஷியொருவ ரங்கிருந்தார்
வெல்லவே யாரென்று
யென்னைக்கேட்டார் வேகமுடன்றான்பயந்து போகரென்றேன்
புல்லவே யேன்வந்தாய்
குகைதான்மீது பொல்லாத மனுஷர்கள் வரலாகாதே
விளக்கவுரை :
1347. ஆகாதுயிக்கிரியி
லேன்தான்வந்தாய் ஆக்கினைகள் மிஞ்சிவிடு முந்தனுக்கு
சாகாதுவரமூலி சித்தர்தந்தார்
சாபமது கொடுத்துவிட்டேன் போபோவென்றார்
போகாது
மற்றதொருவித்தையெல்லாம் பொங்கமுட னுனக்களித்தோம் சாபமில்லை
நோகாதுசித்தர்பத்தர்
மனம்வேகாமற்றான் மேதினியில் தந்திரமாய் நடந்துகொள்ளே
விளக்கவுரை :
[ads-post]
1348. கொள்ளவே வெகுகோடி மனுக்கள்தாமும் குவலயத்தி லுன்னையொரு சித்தனென்பார்
மெள்ளவே செத்தவரை
யெழுப்பும்வித்தை மேதினியில் தள்ளுவது மெத்தநன்று
துள்ளவே லோகமெல்லாஞ்
சித்தாய்ப்போகும் சூட்சமத்தை யொருவருக்குஞ் சொல்லப்போமோ
அள்ளவே வனேகவித வித்தையெல்லா
மன்புடனே யுனக்கீய்ந்தோம் பிழைபோவென்றார்
விளக்கவுரை :
1349. போவெனவே விடைபெற்றுப்
படியிறங்கி பூதலத்தில் யான்வரவே நோக்கங்கொள்ள
காவெனவே கெண்டபேரண்டபட்சி
காணவே யெந்தனையுங் கையமர்த்தி
சாவெனவே யுன்னைநானிப்போதல்லோ
சபிக்கவே வந்தேனென்றருகில்வந்து
கூவெனவே சத்தமிட்ட
தொனியுங்கேட்டு கோடிவரைப் பட்சியங்கே சூழலாச்சே
விளக்கவுரை :
1350. சூழவே நான்பயந்து நடுநடுங்கி
சொல்லவொண்ணா திகிலுடனே யேக்கங்கொண்டு
தாழவே மூர்ச்சையுடன்
கீழ்விழுந்து தடுமாறி திசைமாறி நினைவுகெட்டு
ஆழவே யடியேனுமிருக்கும்போது
அங்ஙனவே கெண்டபேரண்டபட்சி
மீளவே யெந்தனுக்கு சஞ்சிமூலி
யின்பமுடன் றான்கொடுக்க பிழைத்தேன்பாரே
விளக்கவுரை :

