1341. பாரான மேருகிரிதன்னைவிட்டு பாங்குடனே குளிகைதனை பூண்டுகொண்டு
நேரான வாஸ்தான கிரியைக்காண
நேர்மையுடன் விடைபெற்றுவந்தேயானும்
காரான மலைதனிலே யேறிப்போனேன்
கண்டேனே சித்தருட சமாதிதன்னை
நேரான வெட்டவெளி
தன்னைக்கண்டு நின்றிட்டே னொருவரையங் காணகிலேனே
விளக்கவுரை :
1342. காணவே வென்மனது கலங்கும்போது
கண்டேனே சித்தரொருவர் முன்னேநிற்க
தோணவே காயாதி கற்பங்கொண்ட
தோரான சித்தொருவர் மாயாசித்து
காணவே வென்னெதிரில்
ரூபங்கொண்டு நளினமுடன் றான்சபிக்கவந்தயென்னை
பாணப்போல் கோபமதைத்தானடக்கி
பட்சமுட னுபதேசஞ்செய்திட்டாரே
விளக்கவுரை :
[ads-post]
1343. செய்யவே யெந்தனுக்கு
தீட்சைமார்க்கம் செப்பினா ரடியேனும் பிழைக்கவென்று
பையவே சித்தொருவராதிரம்பேர்
படைகூட்டந் தன்னுடனே சூழ்ந்துகொண்டார்
தொய்யவே யடியேனும்
திகிலடைந்தேன் தோன்றவில்லையெந்தனுக்கு என்னசெய்வேன்
வையவேயடியேனும் காலாங்கிதம்மை
வரங்கொடுக்க மனதிலே நினைத்திட்டேனே
விளக்கவுரை :
1344. நினைத்திட்டே னென்சாமி
குருவேயென்றேன் நினைத்ததொரு வண்மைதனை யறிந்துகொண்டார்
முனைந்திட்டு சித்தரெல்லாம்
என்னைப்பார்த்து முழிமிரட்டி காலாங்கி நினைத்தாயல்லோ
கனைத்திட்டு மனோலயத்தை
யறிந்துகொண்டார் காலாங்கிநாயனுடசீஷனென்று
புனைந்திட்டு வென்மீதில்
பட்சம்வைத்து புகழ்ச்சியுடன் கொண்டனைத்தா ரென்னைத்தானே
விளக்கவுரை :
1345. என்னையே கொண்டுசென்று
குகைக்குள்வைத்து யெழிலான வித்தைகளைக் கற்பித்தேதான்
பொன்னையே யிருக்குமிடந்
தானுங்கண்டு புகழான வதிசயங்களெல்லாங்காட்டி
தன்னையே குருவர்க்கமென்றே
சூட்டி தயவாக வுயிர்கொடுக்கு மூலிசொல்லி
பின்னையே போகவெனக்
குறுதிகூறி பிழையென்று வுத்தாரஞ் சொல்லிட்டாரே
விளக்கவுரை :

