போகர் சப்தகாண்டம் 1336 - 1340 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1336 - 1340 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1336. விடைதந்தா ரெந்தனுக்கு சித்தர்தாமும் வெளிப்பட்டேன் மேருகிரிவரையிற்சென்றேன்
மடையுடனே சுனையுண்டு குகைதானுண்டு மார்க்கமுடன் சித்தர்கள் கோடாகோடி
நடையுடனே யவர்களிட பாதஞ்சென்றேன் நாதாக்க ளிருப்பிடமுந் துறையுங்கண்டேன்
சடையுடனே ரிஷிதேவர் தவத்தில்நிற்க சாஷ்டாங்கம் பணிந்து தெண்டனிட்டேன்பாரே

விளக்கவுரை :


1337. பாரேதானவர்களிம் பற்றிப்போனேன் பதிவாக திருமுடியைச் சாய்த்துநின்றேன்
சீரேதானெந்தனுக்கு கருவுசொன்னார் சிறப்பான மூலியுட வுளவுசொன்னார்
நேரேதான் கிரேதாயியுகத்திலப்பா நெடிதான சமாதியிலிருந்தோமென்றார்  
நீரேதான் பூலோகஞ் சென்றாயானால் நேர்ப்புடனே யெமைநினைத்து துதியென்றாரே

விளக்கவுரை :

[ads-post]

1338. துதிக்கையிலே நீநினைத்த காரியந்தான் துப்புரவா வொவ்வொன்றுஞ்சித்தியாகும்
மதிப்புடனே யின்னமுண்டு மனேகசித்தர் மகாகோடிரிஷிமுனிவர் சொல்லப்போமோ
கெதிப்புடனே யவர்மனது நோகாமற்றான் கொண்டனைத்து கார்க்கவென்று மனதிலெண்ணி
நிதிப்புடனே சதாகாலம் பூசைசெய்து நேர்மையாய் வாழவே வசனித்தாரே

விளக்கவுரை :


1339. வசனிக்க மேருவுக்கு கடைபாகத்தில் வாகான குளமுண்டு குகைதானுண்டு
துசனிக்க கருஞ்சாமரை மரமுமுண்டு துடியான கருநெல்லிமரமுமுண்டு 
தசனிக்க வேலக்காய் மரமுமுண்டு தாக்கான கருவேங்கை விருட்சமுண்டு
குசனிக்க மடையொன்று வாறொன்று குறும்பராம் சித்தர்களைக் கண்டேன்தானே

விளக்கவுரை :


1340. தானான சித்தர்களின் குருக்கள்மார்க்கம் சதகோடிசூரியர்போல் பிரகாசிப்பார்
தானான வாற்றருகே வந்துநிற்பார் கருவான சாத்திரங்கள் தர்க்கஞ்சொல்வார்
பானான சிவயோகந்தன்னைச்செய்வார் பாங்குடனே மனோலயத்தைத் தாவிநிற்பார்
தேனான வமுர்தமது முண்டுசித்தர் தேத்தமுடன் வாசமதுசெய்வார்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar